முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன.
போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது.
கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்புரி சங்கு பிறப்பெடுக்கும்.இது போலவே ஆயிரம் வலம்புரி சங்குகளுக்கு இடையில் 'சலஞ்சலம்' என்ற அபூர்வ வகை சங்கு பிறப்பெடுக்கும்.இதில் உச்சகட்டமாக ஆயிரம் சலஞ்சலம் கு நடுவே ஒரு 'பாஞ்சஜன்யம்' உருவாகும்.அப்பேற்பட்ட சிறப்பு பெற்ற பாஞ்சஜன்யம் கிருஷ்ணனால் ஊதப்பட்டது. இந்த பாஞ்சஜன்யத்தில் இருந்து எழும் ஓசையானது,கேட்கும் அனைவரின் ஆத்மநிலையுடன் ஒரு கணம் ஒன்றவைக்கும் விதமாக இருக்கும் என்று ஞானிகள் கூறுவதுண்டு.
இப்பேற்பட்ட பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்த வரலாறு இருவாரக கூறப்படுகிறது. அமிர்தம் வேண்டி தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது ,வெளிவந்த பதினாறு வகை தெய்வீக பொருட்களில் இதுவும் ஒன்று என்று சொல்லபடுவது உண்டு. மகாபாரதக் கதையில் குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்திபனிடம் குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கிருஷ்ணன் வினவிய போது,குரு தன் ஒரே மகனை பஞ்சஜணன் என்ற அரக்கன் கடத்தி கடலுக்கு அடியில் வைத்திருபதாகவும் ,அவனை மீட்டுக்கு கொடுக்குமாறும் கேட்டார். கிருஷ்ணரும் அந்த அரக்கனை வென்று அந்த சங்கு வடிவத்தை வைத்துக்கொண்டதாக மகாபாரதம் கூறுகிறது.
அர்ஜுனன் வைத்திருந்த தேவதத்தம் (தேவர்கள் கொடுத்தது என்று பொருள் )வருணன் கொடுத்தது.
போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது.
கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்புரி சங்கு பிறப்பெடுக்கும்.இது போலவே ஆயிரம் வலம்புரி சங்குகளுக்கு இடையில் 'சலஞ்சலம்' என்ற அபூர்வ வகை சங்கு பிறப்பெடுக்கும்.இதில் உச்சகட்டமாக ஆயிரம் சலஞ்சலம் கு நடுவே ஒரு 'பாஞ்சஜன்யம்' உருவாகும்.அப்பேற்பட்ட சிறப்பு பெற்ற பாஞ்சஜன்யம் கிருஷ்ணனால் ஊதப்பட்டது. இந்த பாஞ்சஜன்யத்தில் இருந்து எழும் ஓசையானது,கேட்கும் அனைவரின் ஆத்மநிலையுடன் ஒரு கணம் ஒன்றவைக்கும் விதமாக இருக்கும் என்று ஞானிகள் கூறுவதுண்டு.
இப்பேற்பட்ட பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்த வரலாறு இருவாரக கூறப்படுகிறது. அமிர்தம் வேண்டி தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது ,வெளிவந்த பதினாறு வகை தெய்வீக பொருட்களில் இதுவும் ஒன்று என்று சொல்லபடுவது உண்டு. மகாபாரதக் கதையில் குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்திபனிடம் குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கிருஷ்ணன் வினவிய போது,குரு தன் ஒரே மகனை பஞ்சஜணன் என்ற அரக்கன் கடத்தி கடலுக்கு அடியில் வைத்திருபதாகவும் ,அவனை மீட்டுக்கு கொடுக்குமாறும் கேட்டார். கிருஷ்ணரும் அந்த அரக்கனை வென்று அந்த சங்கு வடிவத்தை வைத்துக்கொண்டதாக மகாபாரதம் கூறுகிறது.
அர்ஜுனன் வைத்திருந்த தேவதத்தம் (தேவர்கள் கொடுத்தது என்று பொருள் )வருணன் கொடுத்தது.
அருமையான பதிவு.....
ReplyDeleteஅருமையான பதிவு.....
ReplyDelete