Skip to main content

Posts

Showing posts from May, 2015

(W)hatsapp (T)witter (F)acebook தலைமுறை

இந்த காலத்து இளைஞர்களைப் பற்றி கொஞ்சம் செல்லுங்களேன்! இந்த கேள்வியை நமது பெற்றார் இடமோ,நமக்கு முந்தைய தலைமுறையினரிடமோ கேட்டு பாருங்கள். பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். Internet,social media என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள்; cellphone கையுமாக இருக்கிறவர்கள் ; junk food தலைமுறையினர், குடும்பத்தார் மீது உள்ள பாசத்தை அவர்களிடம் காட்டாமல் love u mom னு Facebook status போடும் தலைமுறை. இவையெல்லாம் உண்மை என்ற போதிலும், பல தலைமுறைகளாக இல்லாத விஷயங்களும் எங்கள் தலைமுறையினரிடம் உண்டு. அதை கவனிக்கத்தான் யாரும் முயல்வதில்லை. நம அப்பா,தாத்தா காலங்களில் ஒருவர் வாழ்க்கையில் பெரிய ஈடுபாடுடின்றி சுற்றித் திரிந்தால் "கால் கட்டு போட்டா செரியாப் போயிரும்" என்று சொல்லி கல்யாணம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த கால இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களது வழிகளில் செலுத்தி,தங்கள் லட்சியத்தை அடையாமல் கல்யாணம் குறித்து யோசிப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி  அதீதமாக இருக்கும் நிலையில், போட்டி போட்டுக்கொண்டு ஒடும் தலைமுறையினர் நாங்கள். வாரம் ஐந்து நாட்கள் வேலை செய்வதை  யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. ஆ

வரலாற்றுப் புத்தகத்துக்குள்

வரலாறா?!? அதை பத்தாம் வகுப்பு புத்தகத்தோட மூட்டை கட்டிட்டோமே! இந்த தலைமுறையினர் பதில். அசோகர் மரம் நட்டதும்,காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான் நமக்கு நெனவு இருக்கு.விஞ்ஞானம் எவ்வளவு முக்கியமோ,வரலாறும் அவ்வளவு முக்கியமே.இந்த காலகட்டத்தில், வரலாற்றை வருடங்கள் கொண்ட பெட்டகமாகவே பார்க்கிறோம். ஆனால் வரலாறு என்பது ஓர் உணர்வு. நாம் வாழும் இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான சாம்ராஜ்யங்களும், லட்சக்கணக்கான மன்னரகளும்,பல கலாச்சாரங்களும், நாகரீகங்களும் தோன்றி மறைந்திருக்கிறன. இப்பொழுது இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், விஞ்ஞானத்தில் ஜப்பானுக்கு நிகரில்லாமலிருக்கலாம். ஆனால் அன்றோ, உலகத்தில் இருந்த அத்தனை அரசர்களுக்கும் இந்தியாவை ஆட்சி செய்வதே கனவாக இருந்தது. எங்கும் இல்லா செழிப்பு,வணிகம், மக்கள், கலை.இவைதான் இந்தியா மீது படையெடுக்க முக்கிய காரணங்களாக இருந்தன.தொழில்நுட்பங்களிலும் முதன்மையானவர்களாகவே இருந்து இருக்கிரோம்.தொழில்நுட்பம் இன்றியா ராஜேந்திர சோழர் கடாரம் வரை படை எடுத்தார்?! விஞ்ஞானம் இல்லாமலா தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரத்தோடு நிற்கிறத