Skip to main content

Posts

Showing posts from August, 2015

படித்ததில் பிடித்தது

ஊர் சுற்றி ஒரு காலத்தில் இன்று நானப்படியில்லை, பேர் பெற்ற தலங்கள் நூறு போகாமல் விட்டதில்லை. துணையென யாருமில்லை. எவருதவியும் கேட்டதில்லை. நதிகளின் தீரம் அலசி கோட்டைகள் ஏறியிரங்கி போர் நடந்த வெளிகள்கண்டு விம்மியே நின்றிருப்பேன். அரமணை வாசல் தோட்டம் மலைப்படி கோவில்குளங்கள் அன்றிருந்த ராஜபாட்டை அழியாத சிற்பக் கூடம் இவையெல்லாம் விருப்பக்கணக்கு மனிதரே வியப்பு எனக்கு. மனிதரை அறிந்து கொள்ள சரித்திரம் படிக்க வேணும் தன் கால் இடராதிருக்க மற்றவர் பாதை வேணும். அவனழிந்தது போண்ணாலென்றால் என் காமம் பம்மியிருக்கும். புத்தகச் செருக்குயென்றால் என் புத்தி அடக்கம்கொள்ளும். சிற்பத்தில் பொறுமை கண்டு என் படைப்புக் கூர்மையாகும். அரண்மனை அகலம் கண்டு அவனெங்கே என்று தேடும் அத்தனையும் மண்ணாய்போக அலட்டலகள் யாவும் அபத்தம் உழைப்பதை மேம்படுத்தி உயர்வேதும் விரும்பிடாது என் கடன் பணியேயென்று இருத்தலோர் தனித்தசுகமே. காலத்தின் கோலம்கண்டால் வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும் சிலசமயம் துக்கம் பெருகி கண்ணீரும் தானாய் வழியும் நிகழ்காலம் கடந்த காலம் எதிர்காலம் மூன்றுக்குள்ளே இருப்பதே மனிதக்
முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப
கோஹினூர் ,கொல்லூர் என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இன்று பிரிடிஷ் மணிமுடியை அலங்கரிக்கும் நம் இந்திய சொத்து. கோஹினூர் என்ற வார்த்தைக்கு மலை அளவு வெளிச்சம் என்று அர்த்தம்.பெயருக்கு ஏற்ற வைரம் ஆஹா அது திகழ்கிறது.நம் மகாபாரதத்தில் ஸ்வயம்வண்டக்க (swayamvantaka) என்று அழைக்கப்பட்டது கோஹினூர் வைரமாக இருக்கலாம் என்று குறிப்புகள் உண்டு.பின்பு நாலாயிரம் வருடங்களுக்கு இது பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லை.1304 ஆண்டு வரை இந்த வைரம் மாள்வா அரசர்களிடம் இருந்து இருக்கிறது. அவர்கள் அதை கக்காடியர்களிடம் பரிசாக கொடுத்தார்கள்.பின்பு அலாவுதீன் கில்ஜி இடம் கோஹினூர் சிக்கியது. பின்பு முகலாய அரசர் பாபர் கையில் கோஹினூர் சென்றது.பாபர் சுய சரிதையான பாபர் நாமாவில் கோஹினூர் பற்றிய குறிப்புகள் உண்டு. அதில் ஒரு பெயர் தெரியாத மாளவா அரசர் உடைய வைரம் என்று எழுதப்படிருகிறது. பின்பு ஷாஜஹான் உடைய மயில் ஆசனத்தை கோஹினூர் அலங்கரித்து (peacock throne) .பெர்சிய நாட்டு நாதிர் ஷா படையெடுப்பில் வைரம் ஷா விடம் சென்றது.பின்பு ஷா 1747ஆம் வருடம் கொல்லப்பட்ட பிரகு அவர் தளபதி அஹமத் ஷா துர்ரானி இடம் வைரம் இருந்தது.அதன் பிறகு ஷா சுஜா துர்

அதர்மத்தின் ஊடேயும் சில தர்மங்கள்

நாம் வளரும்போழுதே நமக்கு சொல்லி கொடுக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்று ' தங்கள் சுற்றத்தை பார்த்து தேர்வு செய்வது '. நம்மை சுற்றி உள்ளவர்களை பொருத்தே நாம் சமுதாயத்தில் மதீப்பீடு செய்யப் படுகிறோம் என்றும் , ஆதலால் நாம் சுற்றத்தை சரி வர தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் காதுகள் வலிக்க நமக்கு சொல்லப்பட்டுவிட்டது. ஆதலால் அதையே கூற நான் இதை எழுதவில்லை. நம் தாதா பாட்டி காலத்துக்கு வேண்டும் என்றால் இவ்விதி பொருந்தும்.   நாம் வாழும் இந்த சூழலில் இவ்வாறு வாழ்வது கடினம். என்னைப் பொருத்தவரை சேற்றிலும் செந்தாமரைகள் பூக்கத்தான் செய்யும்.   எப்பேர்பட்ட சூழலிலும் , மிக மோசமானவர்கள் மத்தியிலும் கூட நல்லவனாக வாழ இயலும். அது நம் மனதை பொருத்தே அமைகிறது. சுற்றம் சரி இல்லையேல் கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டுதான். ஆனால் என் செய்ய ? இந்த காலக் கட்டத்தில் அவ்வாறு பழகினோம் ஆனால் சுற்றம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். நம்மை சுற்றி நல்லவர்கள் தான் இருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை இல்லையா என்ன ? நம்மிடம்   நல்லவர்களாக இருக்கிறார்களா   என்று மட்டும்   தான் பாக்க இயலுமோ ஒழிய , அவர்கள் அடிப்படையிலே நல்லவர

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணையாமோ ?" அநீதி கண்டு வி