ஊர் சுற்றி ஒரு காலத்தில்
இன்று நானப்படியில்லை,
பேர் பெற்ற தலங்கள் நூறு
போகாமல் விட்டதில்லை.
துணையென யாருமில்லை.
எவருதவியும் கேட்டதில்லை.
நதிகளின் தீரம் அலசி
கோட்டைகள் ஏறியிரங்கி
போர் நடந்த வெளிகள்கண்டு
விம்மியே நின்றிருப்பேன்.
அரமணை வாசல் தோட்டம்
மலைப்படி கோவில்குளங்கள்
அன்றிருந்த ராஜபாட்டை
அழியாத சிற்பக் கூடம்
இவையெல்லாம் விருப்பக்கணக்கு
மனிதரே வியப்பு எனக்கு.
மனிதரை அறிந்து கொள்ள
சரித்திரம் படிக்க வேணும்
தன் கால் இடராதிருக்க
மற்றவர் பாதை வேணும்.
அவனழிந்தது போண்ணாலென்றால்
என் காமம் பம்மியிருக்கும்.
புத்தகச் செருக்குயென்றால்
என் புத்தி அடக்கம்கொள்ளும்.
சிற்பத்தில் பொறுமை கண்டு
என் படைப்புக் கூர்மையாகும்.
அரண்மனை அகலம் கண்டு
அவனெங்கே என்று தேடும்
அத்தனையும் மண்ணாய்போக
அலட்டலகள் யாவும் அபத்தம்
உழைப்பதை மேம்படுத்தி
உயர்வேதும் விரும்பிடாது
என் கடன் பணியேயென்று
இருத்தலோர் தனித்தசுகமே.
காலத்தின் கோலம்கண்டால்
வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும்
சிலசமயம் துக்கம் பெருகி
கண்ணீரும் தானாய் வழியும்
நிகழ்காலம் கடந்த காலம்
எதிர்காலம் மூன்றுக்குள்ளே
இருப்பதே மனிதக் கூட்டம்.
இதை மீறவே முடியாதையா
சரித்திரம் தெளியத் தெளிய
நிகழ்காலம் உறுதியாகும்
நிகழ்நேரம் உறுதிப்பட்டால்
எதிர்காலம் இடராதிருக்கும்
எதுவுமே நிரந்தரமில்லை
எல்லாமும் முடியுமோர் நாள்
என்பதை தெளிந்து கொள்ள
எவரோடும் சண்டையில்லை
கருத்தினை அழிக்கும்காதல்
மண் மொழி ஆவேசங்கள்
கைகாசு செருகதிகாரம்
கொண்டவர் நிற்பதில்லை
கலையினை மேம்படுத்திக்
கடவுளைத் தேடிய எங்கும்
மனிதரே இங்கு நின்றார்
அவரையும் காலம் விழுங்கும்
புகழ்ச்சியை விரும்பாத
மனிதரே இல்லை யென்றார்
தவறில்லை உண்மைதானே
மனிதரின் தன்மைதானே
இருப்பினும் மூன்றாம் நதிபோல்
இருப்பதறியாதோட அது
வருத்தங்கள் தறாத பெருமை
வன்முறை சிறிதுமில்லை
நான் படைப்பவன்
என் பேர் இறைவன்
எனச் சொன்னவன் வேதவித்து
தமிழரின் அழியாச் சொத்து
இது கர்வத்தின் வெளிப்பாடல்ல
உறுதியின் அலட்சியமாகும்
சரித்திரம் அறிந்த மனிதர்
சாதனை செய்து போவார்
அது சாதனை என்றறியாத்தன்மை
அகந்தையே இல்லாமனசு.
நல்லதைப் புரிந்து கொள்வீர்
சரித்திரம் படிக்கத் துவங்கி.
படிப்பென்றால் புத்தகமல்ல
கணிணியைச் சொறிவதல்ல
துணைக்கென வைத்துக் கொண்டு
நேரடிச் சுற்றுப் பயணம்
பல திக்கும் கொள்வதாலே
பயன்பெறும் உமது வாழ்வு
இப்போது போவதில்லை
முன்பின்னாய் அலைவதில்லை
போனதை மனதில் வைத்து
எழுதுதல் தனித்த சுகமே
சரித்திரம் பெரிதும் விரும்பும்
நண்பர்கள் கூட்டம் பெருகும்
தமிழன்னை உதவி செய்ய
நானிங்கு சரித்திரமானால்.
_எழுத்தாளர் பாலகுமாரனின் முகநூல் பக்கத்தில் இருந்து
இன்று நானப்படியில்லை,
பேர் பெற்ற தலங்கள் நூறு
போகாமல் விட்டதில்லை.
துணையென யாருமில்லை.
எவருதவியும் கேட்டதில்லை.
நதிகளின் தீரம் அலசி
கோட்டைகள் ஏறியிரங்கி
போர் நடந்த வெளிகள்கண்டு
விம்மியே நின்றிருப்பேன்.
அரமணை வாசல் தோட்டம்
மலைப்படி கோவில்குளங்கள்
அன்றிருந்த ராஜபாட்டை
அழியாத சிற்பக் கூடம்
இவையெல்லாம் விருப்பக்கணக்கு
மனிதரே வியப்பு எனக்கு.
மனிதரை அறிந்து கொள்ள
சரித்திரம் படிக்க வேணும்
தன் கால் இடராதிருக்க
மற்றவர் பாதை வேணும்.
அவனழிந்தது போண்ணாலென்றால்
என் காமம் பம்மியிருக்கும்.
புத்தகச் செருக்குயென்றால்
என் புத்தி அடக்கம்கொள்ளும்.
சிற்பத்தில் பொறுமை கண்டு
என் படைப்புக் கூர்மையாகும்.
அரண்மனை அகலம் கண்டு
அவனெங்கே என்று தேடும்
அத்தனையும் மண்ணாய்போக
அலட்டலகள் யாவும் அபத்தம்
உழைப்பதை மேம்படுத்தி
உயர்வேதும் விரும்பிடாது
என் கடன் பணியேயென்று
இருத்தலோர் தனித்தசுகமே.
காலத்தின் கோலம்கண்டால்
வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும்
சிலசமயம் துக்கம் பெருகி
கண்ணீரும் தானாய் வழியும்
நிகழ்காலம் கடந்த காலம்
எதிர்காலம் மூன்றுக்குள்ளே
இருப்பதே மனிதக் கூட்டம்.
இதை மீறவே முடியாதையா
சரித்திரம் தெளியத் தெளிய
நிகழ்காலம் உறுதியாகும்
நிகழ்நேரம் உறுதிப்பட்டால்
எதிர்காலம் இடராதிருக்கும்
எதுவுமே நிரந்தரமில்லை
எல்லாமும் முடியுமோர் நாள்
என்பதை தெளிந்து கொள்ள
எவரோடும் சண்டையில்லை
கருத்தினை அழிக்கும்காதல்
மண் மொழி ஆவேசங்கள்
கைகாசு செருகதிகாரம்
கொண்டவர் நிற்பதில்லை
கலையினை மேம்படுத்திக்
கடவுளைத் தேடிய எங்கும்
மனிதரே இங்கு நின்றார்
அவரையும் காலம் விழுங்கும்
புகழ்ச்சியை விரும்பாத
மனிதரே இல்லை யென்றார்
தவறில்லை உண்மைதானே
மனிதரின் தன்மைதானே
இருப்பினும் மூன்றாம் நதிபோல்
இருப்பதறியாதோட அது
வருத்தங்கள் தறாத பெருமை
வன்முறை சிறிதுமில்லை
நான் படைப்பவன்
என் பேர் இறைவன்
எனச் சொன்னவன் வேதவித்து
தமிழரின் அழியாச் சொத்து
இது கர்வத்தின் வெளிப்பாடல்ல
உறுதியின் அலட்சியமாகும்
சரித்திரம் அறிந்த மனிதர்
சாதனை செய்து போவார்
அது சாதனை என்றறியாத்தன்மை
அகந்தையே இல்லாமனசு.
நல்லதைப் புரிந்து கொள்வீர்
சரித்திரம் படிக்கத் துவங்கி.
படிப்பென்றால் புத்தகமல்ல
கணிணியைச் சொறிவதல்ல
துணைக்கென வைத்துக் கொண்டு
நேரடிச் சுற்றுப் பயணம்
பல திக்கும் கொள்வதாலே
பயன்பெறும் உமது வாழ்வு
இப்போது போவதில்லை
முன்பின்னாய் அலைவதில்லை
போனதை மனதில் வைத்து
எழுதுதல் தனித்த சுகமே
சரித்திரம் பெரிதும் விரும்பும்
நண்பர்கள் கூட்டம் பெருகும்
தமிழன்னை உதவி செய்ய
நானிங்கு சரித்திரமானால்.
_எழுத்தாளர் பாலகுமாரனின் முகநூல் பக்கத்தில் இருந்து
Comments
Post a Comment