Skip to main content

படித்ததில் பிடித்தது

ஊர் சுற்றி ஒரு காலத்தில்
இன்று நானப்படியில்லை,
பேர் பெற்ற தலங்கள் நூறு
போகாமல் விட்டதில்லை.
துணையென யாருமில்லை.
எவருதவியும் கேட்டதில்லை.
நதிகளின் தீரம் அலசி
கோட்டைகள் ஏறியிரங்கி
போர் நடந்த வெளிகள்கண்டு
விம்மியே நின்றிருப்பேன்.
அரமணை வாசல் தோட்டம்
மலைப்படி கோவில்குளங்கள்
அன்றிருந்த ராஜபாட்டை
அழியாத சிற்பக் கூடம்
இவையெல்லாம் விருப்பக்கணக்கு
மனிதரே வியப்பு எனக்கு.
மனிதரை அறிந்து கொள்ள
சரித்திரம் படிக்க வேணும்
தன் கால் இடராதிருக்க
மற்றவர் பாதை வேணும்.
அவனழிந்தது போண்ணாலென்றால்
என் காமம் பம்மியிருக்கும்.
புத்தகச் செருக்குயென்றால்
என் புத்தி அடக்கம்கொள்ளும்.
சிற்பத்தில் பொறுமை கண்டு
என் படைப்புக் கூர்மையாகும்.
அரண்மனை அகலம் கண்டு
அவனெங்கே என்று தேடும்
அத்தனையும் மண்ணாய்போக
அலட்டலகள் யாவும் அபத்தம்
உழைப்பதை மேம்படுத்தி
உயர்வேதும் விரும்பிடாது
என் கடன் பணியேயென்று
இருத்தலோர் தனித்தசுகமே.
காலத்தின் கோலம்கண்டால்
வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும்
சிலசமயம் துக்கம் பெருகி
கண்ணீரும் தானாய் வழியும்
நிகழ்காலம் கடந்த காலம்
எதிர்காலம் மூன்றுக்குள்ளே
இருப்பதே மனிதக் கூட்டம்.
இதை மீறவே முடியாதையா
சரித்திரம் தெளியத் தெளிய
நிகழ்காலம் உறுதியாகும்
நிகழ்நேரம் உறுதிப்பட்டால்
எதிர்காலம் இடராதிருக்கும்
எதுவுமே நிரந்தரமில்லை
எல்லாமும் முடியுமோர் நாள்
என்பதை தெளிந்து கொள்ள
எவரோடும் சண்டையில்லை
கருத்தினை அழிக்கும்காதல்
மண் மொழி ஆவேசங்கள்
கைகாசு செருகதிகாரம்
கொண்டவர் நிற்பதில்லை
கலையினை மேம்படுத்திக்
கடவுளைத் தேடிய எங்கும்
மனிதரே இங்கு நின்றார்
அவரையும் காலம் விழுங்கும்
புகழ்ச்சியை விரும்பாத
மனிதரே இல்லை யென்றார்
தவறில்லை உண்மைதானே
மனிதரின் தன்மைதானே
இருப்பினும் மூன்றாம் நதிபோல்
இருப்பதறியாதோட அது
வருத்தங்கள் தறாத பெருமை
வன்முறை சிறிதுமில்லை
நான் படைப்பவன்
என் பேர் இறைவன்
எனச் சொன்னவன் வேதவித்து
தமிழரின் அழியாச் சொத்து
இது கர்வத்தின் வெளிப்பாடல்ல
உறுதியின் அலட்சியமாகும்
சரித்திரம் அறிந்த மனிதர்
சாதனை செய்து போவார்
அது சாதனை என்றறியாத்தன்மை
அகந்தையே இல்லாமனசு.
நல்லதைப் புரிந்து கொள்வீர்
சரித்திரம் படிக்கத் துவங்கி.
படிப்பென்றால் புத்தகமல்ல
கணிணியைச் சொறிவதல்ல
துணைக்கென வைத்துக் கொண்டு
நேரடிச் சுற்றுப் பயணம்
பல திக்கும் கொள்வதாலே
பயன்பெறும் உமது வாழ்வு
இப்போது போவதில்லை
முன்பின்னாய் அலைவதில்லை
போனதை மனதில் வைத்து
எழுதுதல் தனித்த சுகமே
சரித்திரம் பெரிதும் விரும்பும்
நண்பர்கள் கூட்டம் பெருகும்
தமிழன்னை உதவி செய்ய
நானிங்கு சரித்திரமானால்.
_எழுத்தாளர் பாலகுமாரனின் முகநூல் பக்கத்தில் இருந்து 

Comments

Popular posts from this blog

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாமல் போய் இருந்தால் மகாபாரதம் வேறு மாதிரி போயிருக்கலாம்.அவள்  அ

எழுத்துக்களும் சித்திரங்களே 18

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ