Skip to main content

அத்தியாயம் 3


யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி. தோற்றத்துக்குரிய வீரமும் ,தோரணையும் சற்று கூட பிசகவில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது. சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன்அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான்என்ற எண்ணம் எனக்கு உதித்தது.
மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன்.
என் பெயர் திவாகரவர்தன். தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை. அதற்ககுள் இவர்கள் ...”
வர்தனர் பரம்பரையோ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே. நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே?”
நான் தமிழன்தான். 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன்.”
அவள் சிரித்துக் கொண்டேஇளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள். இது சோழ நாடு. போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போய் சேருங்கள்.”
என்னால் அதை நிரூபிக்க முடியும். உங்கள் சாம்ராஜ்யம் அடுத்து அடுத்து என்ன ஆகும் என்பது முதல் கொண்டு என்னால் கூற இயலும்.என்னை நம்புங்கள் தேவி.எனக்கே ஒரே ஒரு சந்தர்பம் கொடுங்கள்.என்னை ஜோதிடர் என்று வேண்டுமானால் நினைத்துக் கொள்ளுங்கள்
எதையோ தீவிரமாக யோசித்த அவள்,தன் சந்தேக பார்வையை என் மேல் உயர்த்திசரி, சோழ நாடு முழுவதையும் சுற்றி பார்த்து விட்டு என்னை வந்து சந்தியும். உதவிக்கு ஒரு வீரனை அனுப்பி வைக்கிறேன். தங்களுக்குத் தேவையானவற்றை அவன் பார்த்துக் கொள்வான்.”
உதவிக்கு அனுப்பப் படுவது போல ஒரு வீரன் என்னைக் கண்காணிக்க அனுப்பப் படுகிறான் என்று உணர்ந்தாலும் நான் அதை அவளிடம் காட்டவில்லை.
இதே இடத்தில் அடுத்த திங்கள் தன்னைச் சந்திக்குமாறு உத்தரவிட்டாள்.
தேவி ,தாங்கள் யார் ?”
கர்வம் நிறைந்த அவ்விழிகளை உயர்த்திஇராச கண்டியன் , இரசசர்வாக்ஞன் , பெரிய பெருமாள் , சோழ மார்த்தாண்டன் பெருவுடையார் இராச இராச தேவர் அவர்களின் பட்டத்து இளவரசர் உடையார் ராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவி.”
அந்தப் பேரைக் கேட்டவுடன் உள்ளுர ஒரு மரியாதை தோன்ற மண்டியிட்டு வணங்கினேன் . வரலாற்றில் இவள் பெற போகும் இடம் இவளுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவள் மரணம் முதல் கொண்டு எத்தனை மகத்துவம் பெற்றது என்பது எனக்குத் தெரியுமே .

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...