“யார்
நீ
?”
கம்பீரமாக
வந்தது
கேள்வி.
தோற்றத்துக்குரிய
வீரமும்
,தோரணையும்
சற்று
கூட
பிசகவில்லை
.
அவள்
நின்ற
தோரணையே
அவள்
சாதாரண
பெண்
அல்ல
என்பதைக்
காட்டியது.
சோழர்களைப்
பற்றி
ஆயிரம்
தான்
படித்திருந்தாலும்
இவளை
பார்த்த
உடன்
‘அப்பப்பா
,
பெண்களுக்கே
இவ்வளவு
வீரம்
என்றால்
இது
உண்மையிலே
புலி
வம்சம்
தான்
‘ என்ற
எண்ணம்
எனக்கு
உதித்தது.
மதிப்பு
நிறைந்த
விழிகளை
அவள்
கயல்
விழிகளின்
மேல்
நாட்டியதும்
,
நினைவு
தெளிந்தவன்
போல்
பேசத்
துவங்கினேன்.
“என்
பெயர்
திவாகரவர்தன்.
தங்களின்
வீரத்தைக்
கண்டு
,
உங்களை
பாராட்டாமல்
இருக்க
இயலவில்லை.
அதற்ககுள்
இவர்கள்
...”
“
வர்தனர்
பரம்பரையோ?
வடக்கே
உடுக்கும்
உடுப்பு
இதுவல்லவே.
நீ
பாரத
தேசத்தவன்
போல்
இருக்கிறாய்
.
ஆனால்
ஆங்கிலேயர்
உடுப்பில்
இருகிறாயே?”
“
நான்
தமிழன்தான்.
1500 வருடம்
காலப்
பின்
நோக்கில்
வந்துள்ளேன்.”
அவள்
சிரித்துக்
கொண்டே
“ இளைஞரே
,
இதெல்லாம்
வேறெங்காவது
வைத்துக்
கொள்ளுங்கள்.
இது
சோழ
நாடு.
போர்
காலம்
வேறு
.
பத்திராமாக
ஊர்
போய்
சேருங்கள்.”
“என்னால்
அதை
நிரூபிக்க
முடியும்.
உங்கள்
சாம்ராஜ்யம்
அடுத்து
அடுத்து
என்ன
ஆகும்
என்பது
முதல்
கொண்டு
என்னால்
கூற
இயலும்.என்னை
நம்புங்கள்
தேவி.எனக்கே
ஒரே
ஒரு
சந்தர்பம்
கொடுங்கள்.என்னை
ஜோதிடர்
என்று
வேண்டுமானால்
நினைத்துக்
கொள்ளுங்கள்
”
எதையோ
தீவிரமாக
யோசித்த
அவள்,தன்
சந்தேக
பார்வையை
என்
மேல்
உயர்த்தி
“ சரி,
சோழ
நாடு
முழுவதையும்
சுற்றி
பார்த்து
விட்டு
என்னை
வந்து
சந்தியும்.
உதவிக்கு
ஒரு
வீரனை
அனுப்பி
வைக்கிறேன்.
தங்களுக்குத்
தேவையானவற்றை
அவன்
பார்த்துக்
கொள்வான்.”
உதவிக்கு
அனுப்பப்
படுவது
போல
ஒரு
வீரன்
என்னைக்
கண்காணிக்க
அனுப்பப்
படுகிறான்
என்று
உணர்ந்தாலும்
நான்
அதை
அவளிடம்
காட்டவில்லை.
இதே
இடத்தில்
அடுத்த
திங்கள்
தன்னைச்
சந்திக்குமாறு
உத்தரவிட்டாள்.
“தேவி
,தாங்கள்
யார்
?”
கர்வம்
நிறைந்த
அவ்விழிகளை
உயர்த்தி
“இராச
கண்டியன்
,
இரசசர்வாக்ஞன்
,
பெரிய
பெருமாள்
,
சோழ
மார்த்தாண்டன்
பெருவுடையார்
இராச
இராச
தேவர்
அவர்களின்
பட்டத்து
இளவரசர்
உடையார்
ராஜேந்திர
சோழரின்
மனைவி
வீரமாதேவி.”
அந்தப்
பேரைக்
கேட்டவுடன்
உள்ளுர
ஒரு
மரியாதை
தோன்ற
மண்டியிட்டு
வணங்கினேன்
.
வரலாற்றில்
இவள்
பெற
போகும்
இடம்
இவளுக்குத்
தெரியாமல்
இருக்கலாம்.
ஆனால்
இவள்
மரணம்
முதல்
கொண்டு
எத்தனை
மகத்துவம்
பெற்றது
என்பது
எனக்குத்
தெரியுமே
.
Comments
Post a Comment