Skip to main content

Posts

Showing posts from July, 2015

கலி யுக வரதனே கிருஷ்ணா கிருஷ்ணா

இன்றைய காலக் கட்டத்தில் நாம் அடிக்கடி கேட்கும் ஒன்று "கலி காலம் ". அப்படி என்றால் என்ன ? இது கலியுகம் என்றால் வேறு யுகங்கள் இருக்குமா?/இருந்தது உண்டா ? இதற்கான பதில் இந்து மத நூல் ஆனா ஸ்ரீமத் பாகவதத்தில் உண்டு. இந்துக் கலாச்சாரத்தின் படி யுகங்கள் நான்கு உண்டு. முதலாவது சத்ய யுகம்: சத்தியமும் தர்மமும் நிறைந்து இருந்தது.விஷ்ணு முதல் நான்கு அவதாரங்கள்  எடுத்த யுகம்.அடுத்து திரேதா யுகம்: பொதுவாக தர்மத்தை நான்கு கால்களை உடைய எருதாகக் கொண்டால்,இந்த திரேதா யுகத்தில் 3 கால்கள் மட்டுமே. வாமன, பரசுராமன், ராம அவதாரங்களை விஷ்ணு எடுத்த யுகம். அடுத்து துவாப்பர (Dwapara) யுகம். இதில் தர்மத்துக்கு 2 கால்கள். கிருஷ்ணன் அவதரித்த யுகம். பாகவத புராணத்தின் படி இந்த யுகம் 864000 வருடங்கள் நீடித்தது. குருக்க்ஷேத்ரப் போர் முடிந்து கிருஷ்ணன் இந்த பூவுலகை விட்டு சென்ற உடனே கலி யுகம் தொடங்கியது. மகாபாரதத்தில், வில் வித்தைக்கு பெயர் போன அர்ஜூனனுடைய மகன் அபிமன்யூ. வீரத்துக்கு பெயர் போன அபிமன்யூ சக்ரவ்யூகத்தில் இறந்த போது, அவன் மனைவி உத்ரா கருவுற்றிருந்தால். அந்த கரு தான் பின் நாளில் பரிக்ஷித் ம