Skip to main content

Posts

Showing posts from August, 2014

காலத்தின் சூழற்சியில்....

காலச் சக்ரத்தின் சுழற்சியில் நாம் அனைவரும் மிகச் சிறிய அங்கங்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் பூமி இன்றில்லை. இன்று போல பல கண்டங்களோ ,நாடுகளோ அன்று இல்லை. ஹோமொசபியன்ஸ்  என்று அழைக்கப்படும் மனித இனம் உருவாகவே  பல்லாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. அதற்குப் பிறகு மொழி ,நாகரீகம் என்று படிப்படியாக வளரத் தொடங்கியது. பின்பு மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்டான்.பின்பு மற்ற சமூகத்தார் நிலத்தை ஆக்ரமிக்க தொடங்கினான். தங்களை தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை விட வலு இல்லாத சமூகத்தை அடிமை படுத்தவும் எண்ணினார்கள். நாகரீக குழுமங்களாக இருந்த மக்கள் சாம்ராஜ்ய வட்டங்களுக்கு மாறினார்கள்.தங்களை காக்க ஒரு தலைமை இருந்ததால் மக்கள் சுக வாழ்வுக்கு பழக்கப்பட்டார்கள்.அனால் இந்த கால கட்டத்திலும் போர் என்பது இருந்தது.தற்காப்புக்கு போர் என்ற நிலமை மாறி,தங்கள் வலுவை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணமும், பொருட்கள் பல வற்றை கொல்லை அடிக்கும் ஆவலோடுமே போர் நடந்தது.சர்வாதிகாரம் முடிந்த பிறகு சுதந்திர தேசங்கள் தோன்ற தொடங்கின.நாகரீகம் ,நவநாகரீகமாக மாறிற்று. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே மண்ணில் தமிழர்கள் வ

எண்ணெழுத் திகழேல்

ஒரு  மொழிக்கு இன்றி அமையா விஷயம் அந்த மொழியின் எழுத்துக்களே. எழுத்துக்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த மொழியில் வெளி  வந்த படைப்புக்களை. ஒரு சமுதாயம் எப்பேர்ப்பட்டது என்று அதன் படைப்புக்களை வைத்தே சொல்லிவிடலாம். எழுத்துக்கள் ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. நம் தமிழ் நாகரீகத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி  கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று இன்றைக்கு நம்மால் சொல்ல முடிகிறதே ...எப்படி?? அவர்கள் விட்டு விட்டுப் போன கல்வெட்டுகள்ளும், ஓலைச்சுவடிகளும்,நூல்களும் தான் இதற்கு பதில். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை.ஒரு மொழியின் முக்யியத்துவம் அறிந்த நாகரீகத்தின் வெளிப்பாடுகள் நாம்.  அன்று இருந்த மக்களின் வாழ்வியல்,பொழுது போக்கு, அவர்களை ஆண்ட அரசன் எப்பேர்ப்பட்டவன்,ஒவ்வொரு வர்ண மக்களின் வாழ்கை முறை அனைத்தும் வெளிப்பட்டது எழுத்துக்களால் மட்டுமே. அகநானூறு ,கலித்தொகை ,பொருனராற்றுப்படை ,பெரும்பனராற்றுப்படை , நற்றிணை ,பரிபாடல் ,நெடுநல்வாடை, பட்டினப்பாலை,முல்லைப்பாட்டு, தொல்காப்பியம் :இவை எல்லாம் சங்கத்தமிழ் கொடுத்த சொத்துக்கள். கபிலர், நக்கீரர்,இளங்கோவடிகளில் தொடங்கி இன்று வாலி, வைரமுத்து, பாலகும