Skip to main content

காலத்தின் சூழற்சியில்....


காலச் சக்ரத்தின் சுழற்சியில் நாம் அனைவரும் மிகச் சிறிய அங்கங்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் பூமி இன்றில்லை. இன்று போல பல கண்டங்களோ ,நாடுகளோ அன்று இல்லை. ஹோமொசபியன்ஸ்  என்று அழைக்கப்படும் மனித இனம் உருவாகவே  பல்லாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. அதற்குப் பிறகு மொழி ,நாகரீகம் என்று படிப்படியாக வளரத் தொடங்கியது. பின்பு மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்டான்.பின்பு மற்ற சமூகத்தார் நிலத்தை ஆக்ரமிக்க தொடங்கினான். தங்களை தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை விட வலு இல்லாத சமூகத்தை அடிமை படுத்தவும் எண்ணினார்கள். நாகரீக குழுமங்களாக இருந்த மக்கள் சாம்ராஜ்ய வட்டங்களுக்கு மாறினார்கள்.தங்களை காக்க ஒரு தலைமை இருந்ததால் மக்கள் சுக வாழ்வுக்கு பழக்கப்பட்டார்கள்.அனால் இந்த கால கட்டத்திலும் போர் என்பது இருந்தது.தற்காப்புக்கு போர் என்ற நிலமை மாறி,தங்கள் வலுவை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணமும், பொருட்கள் பல வற்றை கொல்லை அடிக்கும் ஆவலோடுமே போர் நடந்தது.சர்வாதிகாரம் முடிந்த பிறகு சுதந்திர தேசங்கள் தோன்ற தொடங்கின.நாகரீகம் ,நவநாகரீகமாக மாறிற்று. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே மண்ணில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் , அவர்கள் பேசிய தமிழ் வேறு,அவர்கள் வாழ்ந்த வாழ்கை வேறு,போர் முறைகள் வேறு. முகலாயர்களை எடுத்துக் கொள்ளுங்கள் ;வாழ்கையை சுக போகத்துடன் வாழ்ந்தவர்கள்.அந்த சந்ததியில் வந்தவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை.எல்லாம் காலத்தின் ஆட்டம் தான்.எது உயருமோ அது தாழும்;எது தாழுமோ அது உயரும்.இது காலத்தின் விதி.பல கோடி மன்னர்களும்,சாம்ரஜியங்களும் தோன்றி மறைந்துவிட்டன. ஆனால் காலம் கடந்தும்  பேசு பெரும் சக்ரவர்த்திகள் மிக சொர்ப்பம்.காலம் அனைத்தையும் விழுங்கவல்லது. இன்று போட்டி போட்டுக் கொண்டு எங்கே ஓடுகிறோம் என்று கூட அறியாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். இன்னும் நூறு ஆண்டு சுழன்றால் நாம் யார் என்று இந்த பூமி கூட அறியாது.அவ்வளவு ஏன் ,நாலு தலைமுறை தாண்டினாள் நம் சந்ததிகளுக்கே நம்மை தெரியாது. இதை அறியாமல் பணம், புகழ் என்று தேடி  மனித அடையாளங்களையும் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  மேட்ராப்பாலிட்டன் என்று அழைக்கப்படும் இந்த நகரங்களில் (நரகங்களில்)வாழ்பவர்களை பாருங்கள்.சிரிக்க கூட நேரம் இல்லாமல் பர பரப்பாய் இயங்கும் மக்கள் கூட்டம். எல்லாவற்றுக்கும் ஆசை பட்டு  ஓடி சந்தோஷத்தையும் ,நிம்மதியையும் தொலைத்த மக்களாய் நாம் வாழ்கிறோம். தொழில்நுட்ப வளர்சியின் உச்சத்தில் இருக்கும் நமக்கு மனிதர்களோடு முரண்பாடு ;இயந்திரங்களோடு மட்டும் உடன்பாடு.சந்தோஷத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு வாழுங்கள்.காரணம் இன்றி சிறு பிள்ளையைப் போல் சந்தோஷமாக இருங்கள்.இந்த நிலை இல்லா உலகில் மகிழ்ச்சி மட்டுமே நிலையானது.மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.  ஒவ்வொரு நொடியிலும் புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் சோகங்களையும் காலம் விழுங்கி விடும்.காலம் நம்  மனதை வசப்படுத்த வல்லது. உங்கள் குறிக்கோளை நோக்கி சந்தோஷத்துடன் அடி எடுத்து வையுங்கள்.
 காலம் கடந்து  நம் பெயர்கள் நிலைக்குமா??
       காலம் பதில் சொல்லட்டும் ......
             

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...