Skip to main content

எண்ணெழுத் திகழேல்

ஒரு  மொழிக்கு இன்றி அமையா விஷயம் அந்த மொழியின் எழுத்துக்களே. எழுத்துக்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த மொழியில் வெளி  வந்த படைப்புக்களை. ஒரு சமுதாயம் எப்பேர்ப்பட்டது என்று அதன் படைப்புக்களை வைத்தே சொல்லிவிடலாம். எழுத்துக்கள் ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. நம் தமிழ் நாகரீகத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி  கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று இன்றைக்கு நம்மால் சொல்ல முடிகிறதே ...எப்படி?? அவர்கள் விட்டு விட்டுப் போன கல்வெட்டுகள்ளும், ஓலைச்சுவடிகளும்,நூல்களும் தான் இதற்கு பதில். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை.ஒரு மொழியின் முக்யியத்துவம் அறிந்த நாகரீகத்தின் வெளிப்பாடுகள் நாம்.  அன்று இருந்த மக்களின் வாழ்வியல்,பொழுது போக்கு, அவர்களை ஆண்ட அரசன் எப்பேர்ப்பட்டவன்,ஒவ்வொரு வர்ண மக்களின் வாழ்கை முறை அனைத்தும் வெளிப்பட்டது எழுத்துக்களால் மட்டுமே. அகநானூறு ,கலித்தொகை ,பொருனராற்றுப்படை ,பெரும்பனராற்றுப்படை , நற்றிணை ,பரிபாடல் ,நெடுநல்வாடை, பட்டினப்பாலை,முல்லைப்பாட்டு, தொல்காப்பியம் :இவை எல்லாம் சங்கத்தமிழ் கொடுத்த சொத்துக்கள். கபிலர், நக்கீரர்,இளங்கோவடிகளில் தொடங்கி இன்று வாலி, வைரமுத்து, பாலகுமாரன்  வரை எண்ணற்ற எழுதாலர்களை தோற்றுவித்த மண் இது. அன்று ஒரு கம்பன் இல்லேயேல் அது வால்மீகி ராமயானமாக  வடமொழியில் மட்டுமே இருந்திருக்கும். தாய் மொழியில் ஒரு தகவல் வெளி வரும்போது அது பலரை வெகு எழிதில் எட்டிவிடும். எழுத்துக்களில் வெறும் கருத்துக்களையோ,அல்லது வரலாற்று நிகழ்வுகளையோ  வெறும் உண்மைகளாக (facts) கொடுத்தால் அது படிப்பவர்களுக்கு ஒரு சுவாரசியத்தை கொடுக்காது. மகாபாரதத்தை ஒரு வரலாறாகவோ, இல்லை நீதிகலகவோ குடுத்து இருந்தால் அது படிப்பவர்களுக்கு அவ்வளவு பிடிப்பாக இருந்திருக்காது. வரலாற்றையும் ,நீதிகளையும்,நெரிகலையும் ,கதாபாத்திறங்கலைப் பற்றிய குறிப்புக்களும் மிக சரியாக அமைந்தனாலேயே
மகாபாரதம் ஈடில்லா  மாகாவியமாக திகழ்கிறது. சோழ வரலாற்றை விளக்கும் வகையாக இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொள்வோம். ஒன்று: நீலகண்ட  சாஸ்த்ரி அவர்களின் புத்தகம்.  அது  சோழர்களை பற்றிய தகவல் களஞ்சியம் தான் என்றாலும் அது படிப்பவர்களுக்கு அவ்வளவு சுவாரசியம் தராது.இதே பொன்னியின் செல்வன் எடுத்துக்கொள்ளுங்கள், சுவாரசியதுக்குப் பஞ்சம் இல்லை. வந்தியதேவனிடம் மயங்காத வாசகர்கள்  உண்டோ?கதாபாத்திரங்களின் அனுமானமும் ,  அவற்றின்  போக்கும் பொன்னியின் செல்வன் வெற்றிக்குக் காரணம். வந்தியாதேவர் என்று ஒருவர் இருந்தார் என்பது உண்மை ,அவரது நடை ,உடை ,பாவனைகள் எல்லாம் கற்பனை. நிஜத்தோடு கற்பனை  சேரும்போழுதே ஒரு படைப்பு வாசகர் உள்ளதுகுச் செல்கிறது. இதனாலேதான் நம் சிறு வயதுகளில் நீதி நெறிக் கதைகளை நமக்குச் சொன்னார்கள். கதை மட்டும் இன்றி கருத்தும் உள்ளே செல்லும் என்ற நம்பிக்கை தான். சாண்டில்யன் எழுத்து நடையில் இது ஒரு முக்கியமான அங்கம்.கதை தலைவானாக ஒருவனை பாவித்து விடுவது,அதை சுற்றி வரலாற்றயும் சொல்வது. அந்த கதை தலைவனின் காதல்,வீரம் என்று கதை மிக அழகாக போகும். இந்தக் கற்பனை கதாபாத்திரங்களோடு படிப்பவர்களை  காதல் வயப்பட வைப்பதே ஒரு சிறந்த எழுத்தாலனுக்கு  அழகு. சோழத்தை நான் நேசிக்க காரணம் கல்க்கியும் ,பாலகுமாரனும் மட்டுமே. இதெல்லாம் வரலாறும் ,சமூகமும் சார்ந்த எழுத்துக்கள்.  காதல்,நட்பு, வாழ்வு,இன்பம்,துன்பம் என்று மனிதர் வாழ்கையில் நடக்கும் விஷயங்களை கவிதை நடையில் கொடுக்கும் கவிஞர்களும் ஒரு பொக்கிஷம். அவர்களுக்கு கற்பனை திறன் மிக மிக அதிகம். ரசனையும் அதிகம். நாம் சாதரணமாக பாக்கும் ஒன்றை ரசனையுடன் பார்ப்பதே ஒரு கவிஞன் மனம். நம் திறன்களையும்,சோகங்களை இறக்கி வைக்க எழுத்து ஒரு வாய்ப்பு. நம் எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாக அது அமையும். எழுதுவதற்கு முன்பு நல்ல புத்தகங்களை படியுங்கள்.உங்கள் எண்ண ஓட்டங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். வாசகர்களுக்காக எழுதாதீர்கள்; உங்கள் மன நிம்மதிக்காக எழுதுங்கள். உங்கள் படைப்புக் கோட்டைக்கு நீங்களே ராஜா;உங்கள் எண்ணங்களே மந்திரி! வளரட்டும் எழுத்துக்களின் ராஜ்ஜியம்.

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...