Skip to main content

Posts

Showing posts from July, 2014

எத்திசையும் புகழ் மனக்க இருந்த பெரும் தமிழன் இங்கே

இந்த பெயருக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை,சக்கரவர்த்தி ,மாமன்னர் ராஜேந்திர  சோழன். கங்கை வரை தன் பலத்தை விஸ்தரித்ததால் அவர்  கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப்பட்டார்.ராஜா ராஜா சோழ தேவருக்கு மகனாக பிறந்தவர். தந்தை, எட்டு அடி பாய்ந்த புலி:மகன் பதினாறு அடி பாய்ந்த புலி. சோழ தேசத்தின் மிக உன்னதமான ஆட்சிக்  காலம் ராஜேந்திரன் ஆட்சி தான். வீரத் தமிழனை அறியாத தமிழர்களாய் நம்முள் பலரும் வாழ்கிறோம். ஆடி மாதம்,மகர ராசி,திருவாதிரை  நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த கணக்கு படி இன்று வீரமாமன்னன் ராஜேந்திரன் பிறந்த நாள். அவர்  அரியணை ஏறிய ஆயிரமாவது வருடம் இது. 1014ஆம் ஆண்டு ,ராஜா ராஜர் இறந்த பிறகு, அவர் அரியணை ஏறினார். இவர் பிறந்தநாளுக்கு சமர்பணமாக இதோ இந்த படைப்பு.                      தந்தைக்கு எட்டா கனியாக  இருந்த பலவும்,ராஜேந்திரன் கைக்கெட்டியது. சேர தேசத்தயும் ,பாண்டியர்களையும்  தலை காட்ட இயலாதவாறு  அடித்து நொறுக்கினார்.ராஜ ராஜன் காலத்திலிருந்தே  நெருக்கமாக இருந்த  கீழை  சாளுகியம் (இன்றைய ஆந்திரா பிரதேஷ்) ராஜேந்திரன் ஆட்சியிலும் அவ்வாறே இருந்தது. அவர் மகள் அமங்காதேவியை கீழை சாளுக்கிய இளவரச

சத்ரியனாய் இருப்பதை விட சானக்யனாய் இருப்பதே மேல்

சத்ரியனாய் இருப்பதை விட சானக்யனாய் இருப்பதே மேல் ,என்று பலர் கூற கேட்டிருக்கிறோம். இதற்கு அர்த்தம் வீரத்தை காட்டிலும் விவேகமே மேல் என்பதாகும். இதற்கு உதரனமாய் திகழ்ந்த சாணக்யன் யார் என்று நம்முள் பல பேருக்கு தெரிந்திருக்காது.விஷ்ணு குப்தா என்றும் கௌடில்யா என்றும் அழைக்கப்பட்டு  பாடலிபுத்ர நகரத்தில் பிறந்தவர். அப்பொழுது மகத நாட்டை ஆண்ட தனாநந்தா என்ற ஒரு அரசன், கொடுங்கோள் ஆட்சி செய்து வந்தான்.  அந்த ஆட்சியில் சானக்(சாணக்யாவின் தந்தை ) என்ற அழைக்கப்பட்ட ஒரு அந்தணன் இந்த ஆட்சிக்கு எதிராக குறல் கொடுத்து வந்தார். பின் அவர் தனானந்தாவால் கொல்லப்பட்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சாணக்யா தநானந்தாவை அரியணை விட்டு அகற்றுவதாகவும் அது வரை தன்  சிகையை முடிய மாட்டேன் என்றும் சபதம் செய்தார்.பின்பு டக்ஷில்லா பல்கலைக்கழகத்துக்குச் சென்று வேதங்களை கற்றறார். அரசியல் மற்றும்  பொருளியல் துறையில் மிகச் சிறந்து விளங்கினார்.சிறு வயதிலிருந்தே நல்ல கேள்வி ஞானம் உடையவர்.அங்கு படித்து முடித்த பிறகு அங்கேயே கற்பிக்க ஆரம்பித்தார்.ஆச்சார்யா என்று அனைவராலும் அழைக்கப் பட்டார்.பல ராஜாக்களும் ,யுவராஜர்களும் இவரிடம் கல்வி

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாமல் போய் இருந்தால் மகாபாரதம் வேறு மாதிரி போயிருக்கலாம்.அவள்  அ

காவேரி மைந்தன் பொன்னியின் செல்வனுக்கு

பாரதம் கண்ட மிக உன்னதமான சக்ரவர்த்திகளில் ஒருவர்   ராஜ ராஜ சோழன் . அருண் மொழி வர்மன் என்ற இயற்பெயர் மட்டும் இன்றி ராஜ ராஜ தேவர் , பெருவுடையார் , ராஜ கேசரி வர்மன் என்ற பல பெயர்களுக்குச் சொந்த க் காரர் . பராந்தக சுந்தர சோழருக்கும் , திருக்கோவிலூர் மலையமான் மகள்   வானவன்மாதேவிக்கும் மகனாக பிறந்தவர் . ஐப்பசி மாதம் , சதய நட்சத்ரத்தில் இவர் அவதரித்ததின் பொருட்டு , சதய திருவிழா என்று மிக கோலாகலமாக சோழ தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டது . இவரது தமையன் ஆதித்த கரிகலானே பட்டத்து இளவரசன் . இவரது தமக்கை குந்தவை நாச்சியார் . தமக்கையின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவர் . தமக்கையின் மீது உள்ள பாசத்தில் தன் மகளுக்கும் குந்தவை என்ற பெயர் இட்டார் . சோழ அரசியலில் குந்தவை பிராட்டியாருக்கும் , அவளுடைய கணவனான வல்லத்து  அரசன் வந்தியாதேவருகும் ஒரு மிக பெரிய இடம் உண்டு . இதை நாம் தஞ்சை பெருவுடையார் கோவில் கல் வெட்டுகளில் காணலாம் . பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் இருக்க அருண் மொழி அரியணை ஏறியது எப்படி என்று