Skip to main content

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

'silence and smile are two powerful tools'  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே.

சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம். 
 சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம்.

மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாமல் போய் இருந்தால் மகாபாரதம் வேறு மாதிரி போயிருக்கலாம்.அவள்  அன்று சிரித்த சிரிப்பின் எதிரொலி ,தர்மன் பகடை விளையாட்டில் தோற்ற அந்த தினத்தில் வெளிப்பட்டது.துர்ஷாஷணன் திரௌபதியின் சேலையை சபையில் இழுத்து அசிங்கப்படுதினான்.அன்று கர்ணன் நினைத்திருந்தால்  தடுத்து நிருத்தியிற்காலம் ஆனால் திரௌபதி செய்த அவமானத்தை மனதில் கொண்டு கர்ணன் முன்வரவில்லை. ஒரு சிறிய சிரிப்பு வாழ்க்கையையே  புரட்டிப்போடக்கூடியது.அதே போல தான் மௌனமும். பல சமயங்களில் மௌனம் மிக உன்னதமான ஒன்று.ஆனால் சில சமயங்களில் மௌனம் ஒரு துரோகம். திரௌபதிக்கு அன்று சபையில் நடந்த  அவமானத்தை பிதாமகரான பீஷ்மரும் ,குருவான துரோணரும் தடுக்காமல் அமைதி காத்தது பிசகு.இவர்கள் மௌனம் கலைந்திருக்கலாம்.அநீதியின் போது அமைதி காப்பதும் ஒரு குற்றமே! இன்று பலரும் பீஷ்மராகவும் ,த்ரோனராகவுமே வாழ்கிறோம் என்பதே கசப்பான உண்மை. அதே போல மகாபாரத போரில் அவர்கள் இருவரும் விலகியிருக்கலாம். பீஷ்மர் ,ஹச்தினபுரத்து அரசரை காப்பதாக மட்டுமே உறுதி கொண்டிருந்தார். அவர் எண்ணி இருந்தால் போர் முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கு துணையாக அவர் போய் இருக்கலாம்.அங்கு அவரும் துரோணரும்  அமைதி காத்திருந்தால் ,குருஷேத்திர போர் இவ்வளவு உக்கிரமமாக போய் இருக்காது.ஏன் நடக்காமல் கூட போக  வாய்ப்பிருந்தது . சந்தர்பங்கள் அடங்கியதே வாழ்கை.இப்படி நான் செய்து இருக்கலாம் ,அல்லது செய்யாமல் இருந்திருக்கலாம் என்று பின்னால் வருத்தப்பட்டு எந்த உபயோகமும் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் ஏற்ற எதிர்வினை நிகழ்ந்தே தீறும்.அதை நம்முள் பல பேர் விதி என்றும் ,கடவுள் செயல் என்றும் கொள்கிறோம் . ஆக நாம் எந்த செயலை செய்வதற்கு முன்பும் அதன் வினைகளை எண்ணியே செய்யவேண்டும்.
விளைந்த பிறகு யோசித்துப் பயனில்லை,விதைக்கும் பொழுதே யோசியுங்கள்.

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...