Skip to main content

எத்திசையும் புகழ் மனக்க இருந்த பெரும் தமிழன் இங்கே

இந்த பெயருக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை,சக்கரவர்த்தி ,மாமன்னர் ராஜேந்திர  சோழன். கங்கை வரை தன் பலத்தை விஸ்தரித்ததால் அவர்  கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப்பட்டார்.ராஜா ராஜா சோழ தேவருக்கு மகனாக பிறந்தவர். தந்தை, எட்டு அடி பாய்ந்த புலி:மகன் பதினாறு அடி பாய்ந்த புலி. சோழ தேசத்தின் மிக உன்னதமான ஆட்சிக்  காலம் ராஜேந்திரன் ஆட்சி தான். வீரத் தமிழனை அறியாத தமிழர்களாய் நம்முள் பலரும் வாழ்கிறோம். ஆடி மாதம்,மகர ராசி,திருவாதிரை  நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த கணக்கு படி இன்று வீரமாமன்னன் ராஜேந்திரன் பிறந்த நாள். அவர்  அரியணை ஏறிய ஆயிரமாவது வருடம் இது. 1014ஆம் ஆண்டு ,ராஜா ராஜர் இறந்த பிறகு, அவர் அரியணை ஏறினார். இவர் பிறந்தநாளுக்கு சமர்பணமாக இதோ இந்த படைப்பு.

                     தந்தைக்கு எட்டா கனியாக  இருந்த பலவும்,ராஜேந்திரன் கைக்கெட்டியது. சேர தேசத்தயும் ,பாண்டியர்களையும்  தலை காட்ட இயலாதவாறு  அடித்து நொறுக்கினார்.ராஜ ராஜன் காலத்திலிருந்தே  நெருக்கமாக இருந்த  கீழை  சாளுகியம் (இன்றைய ஆந்திரா பிரதேஷ்) ராஜேந்திரன் ஆட்சியிலும் அவ்வாறே இருந்தது. அவர் மகள் அமங்காதேவியை கீழை சாளுக்கிய இளவரசன் ,அதாவது தன் தங்கை மகனுக்கு மனம் முடித்ததனால் கீழை சாளுகியம் மிக இணக்கமாக இருந்தது.கீழை சாளுகியத்துக்குத்  தொந்தரவு கொடுத்து வந்த மேலைச் சாளுக்கியத்தின் மீதும் ராஜேந்திரன் படை தன் வேலையைக்   காட்டியது. பின் கலிங்கம்,ஓட்ட தேசம், உத்திரலாடம்,தட்சினலாடம்,கோசலம்,மேற்கு வங்கம் என்று வரிசையாக ராஜேந்திரன் வசமாயிற்று.இலங்கையில் இருந்த பாண்டியன் மணிமுடியையும்  வசப்படுத்தியப்  பெருமை இவருக்கே. ஜெயங்கொண்டத்தை   தலை நகராக மாற்றி அமைத்தார்.கங்கை கரையில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் ஜெயங்கொண்டதில் உள்ள சிவனுக்கு கொண்டுவரப்பட்டது.அங்கு இருந்து கொண்டு வரப்பட்ட நீர் ஒரு ஏரியாக அமைக்கப்பெற்று அது சோழ கங்கம் என்று அழைக்கப்பட்டது.இவர் போர் முறை வேறு ..ராஜ ராஜர் போர் முறை வேறு. ராஜா ராஜர் மிருதுவான போர் முறைகளைக் கையாண்டார். ஆனால் ராஜேந்திர சோழன் அடித்த பிறகு அந்த சாம்ராஜ்யம் எழ பல வருடங்கள் ஆகும். இவர் காலத்தில் தான் முஹமத் கஜினி என்றவன் வடக்கே ஹிந்துக்களின் கோவில்களை நாசம் செய்து அந்த செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். அவன் படை சிறிது.ஆனால் வட தேசத்து அரசர்களுக்குள்ளே ஒரு ஒற்றுமை இல்லாததே கஜினியின் வெற்றிக்குக்  காரணம் . அவன் தெற்கே வராமல் இருந்ததுக்கு ராஜேந்திரன் கூட ஒரு காரணம். ஒரே குடையின் கீழ் சோழ தேசம் விரிந்ததே காரணம்.ராஜேந்திரன் அமைத்த அந்த கங்கை கொண்ட சோழபுரம் மிக அழகான ஒரு கட்டடக் கலை கொண்டது.தஞ்சை கோயிலை போல் வடிவத்தைக் கொண்டது.தஞ்சை கோவில் :கம்பீரம்.கங்கை கொண்ட சோழபுரம்: நலீனம். அந்த லிங்கத்தின் கீழ் உள்ள சந்திரகாந்தக்கல் குறிப்பிடத்தக்கது. குளிர் காலத்தில் கருவறையை வெதுவெதுப்போடும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் வைக்கும் திறன் உடையது. பல அழகான சிலைகளால்   செதுக்கப்பட்ட சுற்றுசுவர் கொண்டது.அதில் சண்டேஸ்வர நாயன்மாருக்கு சிவன் முடி சூட்டும் விதமாக ஒரு சிலை உண்டு. அதன்  நளினம் இது வரை எந்த கோயிலிளும் இல்லை.தந்தை போல செய்ய எண்ணி தொடங்கிய பணி ஏனோ நிறைவு பெறவில்லை.மதில் சுவர்களும் ,வாயில்களும் இருந்து இருந்தால் தஞ்சை பெரிய கோவிலை போல் நிறைவு பெற்று நின்றிற்கும்.ராஜேந்திரனுக்கு பிறகு அரசாட்சி செய்தது அவர் மகன் ராஜ ராஜன். இரண்டாம் ராஜ ராஜன் கட்டிய தாராசுரம் மிக நுட்ப்பமான வேலைப் பாடுகலைக் கொண்டது.ஆனால் ஏனோ அதுவும் முழுமையாக முடிக்கப்படவில்லை.ராஜ ராஜருக்கு இருந்த அருள் வேறு யாருக்கும்  இல்லை போலும்.ஏனோ மற்ற அரசர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்  அளவுக்கு நம் தமிழ் நாட்டை ஆண்டவர்களைப்  பற்றி இங்கு வாழ்பவர்களுக்கே  தெரிவதில்லை.நாம் வாழும் கலாச்சாரத்தின் வித்துக்கள் இவர்கள். ஆறாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தைத் தாண்டி இவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முன் வருவதும் இல்லை. வீரத் தமிழர்கள் வாழ்ந்த பூமி இது. இயந்திரங்கலோடே வாழ்ந்து பழகி விட்ட மனிதர்களே,ஒரு முறையேனும் சோழ தேசம் சென்று வாருங்கள்..மனதை தொலைத்து விட்ட மனிதர்களே,உங்கள் மனங்களில் கண்டிப்பாக  ஒரு மாற்றம் தெரியும்.

வேர்களை அறியாப் பூக்கள் பூத்தென்ன பயன்?  



சண்டேஸ்வர நாயனாருக்கு சிவன் முடி சூட்டும் விதமாக ஒரு சிலை
(கங்கை கொண்ட சோழபுரம்)
கங்கை கொண்ட சோழபுரம் 


வேலைப்பாடுகளை கொண்ட விமானம் 

ராஜேந்திர சோழன் கீழ் இருந்த சோழ சாம்ராஜ்யம் 

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...