Skip to main content

ராஜ ராஜனின் ராணிக்கே சமர்ப்பணம்!



சோழர்கள்...நம் தமிழக நாகரீகம்  வளர  வித்துக்களாய் இருந்தவர்கள்.சோழர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ராஜ ராஜ சோழன்.ராஜ ராஜ சோழன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தஞ்சை பெருவுடையார் கோவில்.ஆனால் எனக்கு வேறு ஒருவரும் நினைவில் வருகிறார்.பஞ்சவன் மாதேவி. அடிப்டையில் தேவரடியாளாக (நாட்டியப் பெண் ) இருந்தவர். ராஜ ராஜ சோழனை மணம் முடித்த பிறகு அரசியல் மற்றும் நிருவாகங்களில் பெறும் பங்கு வகித்தவர். பல போர்களை கண்டவர்.ஒரு அரசரின் மனைவியாக மற்றும் இன்றி சோழ தேசத்தின் மேன்மைக்காக உழைத்தவர். அவள் ராணியாக இருந்து ,சுகபோகங்களை அனுபவித்து மட்டும் போய் இருக்கலாம்.ஆனால் அவள் அப்படி செய்யவில்லை.தனக்கு பிறக்கக் கூடிய குழந்தையால் ராஜேந்திர சோழனுக்கு இளவரசர் பட்டம் கட்ட முடியாமல் போய் விடுமோ என்று பயந்து தன்னை மலடாகிக்கொண்டவள் . ராஜேந்திர சோழர் இவளுக்காக கட்டிய பள்ளிப்படை கோவில் இன்றளவும் பட்டீஸ்வரத்தில் இருப்பதை நாம் காண முடியும்.தன் சொந்தத் தாய் அல்லாவிட்டாலும் ,ராஜேந்திர சோழர் எழுப்பி உள்ள இந்த கோவிலை பார்க்கும் பொழுது அவள் எவ்வளவு உன்னதமான ராணியாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த கோவிலில் உட்கார்ந்து சிந்த்தித்தால் அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை நம்மால் உணர இயலும்.ஆனால் அந்த பள்ளிப்படை கோவில் மிக மோசமான நிலைமையில் உள்ளது.நான் சென்ற பொது கோவிலின் சாவியை அருகில் உள்ள கடையில் பெற்று ,கோயில் கதவுகளை திறந்து உள்ளே சென்று பார்த்த  பொது,சுற்று சுவர் மட்டுமே மீதம் உள்ளது தெரிந்தது. அருகில் உள்ள பலரை விசாரித்த பொழுது ,அப்படி ஒரு கோவில் இருப்பதாக கூட அவர்களுக்கு தெரியவில்லை. 'சிவன் சொத்து குல நாசம் ' என்று சொல்வார்கள்.அதை அறியாமலே கோவில் நிலத்துக்குள் எத்தனை ஆக்கிரமிப்புக்கள். வெளவால்கள்  வாழ்விடமாக மட்டுமே அது உள்ளது.ஆயிரம் வருடங்களுக்கு முன் தலை சிறந்த ராணியாய் திகழ்ந்தவருக்கு நாம் காட்டும் மரியாதை இதுவோ??அந்த கோவிலுக்கு தினம் சென்று அதை சுத்தம் செய்து ராமலிங்க சுவாமியை தரிசிக்க மனம் ஆர்வம் கொள்கிறது. தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் பகுதியில் வசிப்பின் நான் அதை செய்திருக்கலாம்.ஆயிரம்  ஆண்டுகள்,ஒரு மகா ராணியையே விழுங்கிவிடும் பொது நாம் எம்மாத்திரம்?? காலம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.இன்னும் நூறு வருடங்களில் நாம் வாழ்ந்த சுவடு கூட இங்கே மிஞ்சாது.இதை புரிந்து கொள்ளாமல்  ஆட்டம் போடும் மனிதர்கள். இன்னும் ஆயிர வருடங்களுக்கு பிறகும் இவள் பேச படவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். காலம் அனைத்தையும் சுருட்டி  தன்னுள் அடக்கும் திறன் உடையதுதான்,ஆனால் நாம் வாழும் வாழ்க்கை உன்னதமாக இருந்தால் காலம் கடந்தும் நாம் வாழலாம்!
               வாழ்க பஞ்சவன்மாதேவி! சோழம்! சோழம்! சோழம்!
பஞ்சவன்மாதேவிசுவரம் ,பட்டீஸ்வரம் 

மிஞ்சி உள்ள மதில் சுவர் 

மோசமான நிலைமையில் துவாரபாலகர் சிலை  

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...