கும்பகோணம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது டிகிரி காப்பி! தஞ்சாவூர் அருகே, காவிரிக் கரையோரம் அமைந்துள்ள கும்பகோணம், ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் முக்கியப் புள்ளி! குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த நகரம். தடுக்கி விழுந்தால் கோயில்கள்,காவிரியால் செழித்த வயல் வெளிகள் என்று விளங்கும் நகரம்! மகாமகத்திற்கும், ஜோதிடத்திற்கும் பெயர் போன நகரம்! இன்று கும்பகோணத்தில் உள்ள பட்டீஸ்வரம் தான், ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்த பழையாறை.விஜையால சோழனுக்கு பின்பு தான் தஞ்சை பிரசித்தி பெற துவங்கியது.அது வரை பழையாறை நகரே சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகத் திகழ்ந்தது! அக்காலத்தில்
கோயில்கள் ஆன்மீக சமந்தப்பட்ட விஷயமாக மட்டும் இல்லாமல், அந்த ஆட்சியின் ஒரு இயந்திரமாக இருந்திருக்கிறது!
காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோயில்கள் சில, காசிக்கு இணையானவை என்று கூறப்படுகிறது! அவற்றுல் ஒன்று, திருவிடைமருதூர் (திருஇடைமருதூர்) மகாலிங்கேஸ்வரர் கோவில்! இந்த கோவில் வரலாறு சற்று என்னை வியக்க வைத்தது! வரகுண பாண்டியன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்! ஒரு நாள் அவன் குதிரை ஒரு அந்தணனை மிதித்துக் கொன்றது.என்னதான் தன்னை அறியாமல் நடந்த நிகழ்ச்சி என்றாலும், ஒரு அந்தணனை கொன்றதால் அவனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது.அது மட்டும் அல்லாமல் அந்த பிராமணன் ஆவியும் அரசனை துன்புறுத்தத் துவங்கியது. இதையடுத்து, வரகுண பாண்டியன் கனவில் சிவ பெருமான், தன்னை திருவிடைமருதூரில் வந்து வழிபடுமாறு கூறினார். சோழ நாட்டில் உள்ள குடந்தைக்கு எப்படி செல்வது?! பின் தன் படையுடன் சோழ படையை வென்று, மகாலிங்கேஸ்வரரை வழிபட சென்றான். பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்ற போது, பிரம்மஹத்தி அரசருக்காக காத்திருந்தது. உள்ளே சிவன் ராஜாவிடம் மேற்கு வாசல் வழியாக வெளியேறினால் பிரம்மஹத்தி நீங்கும் என்று சொல்ல,அவரும் அம்மன் சன்னதி வழியாக வெளியேறினார். இதனால், இன்றளவும் கிழக்கு வாசலில் உள்ளே செல்பவர்கள், மேற்கு வாசல் வழியாக வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.அந்த பிரம்மஹத்தி இன்னும் அரசருக்காக காத்திருப்பதாக நம்பப்படுகிறது. சந்திரமுகி எப்பெக்டு வந்தாலும், இதுவே இத்தல வரலாறு!
ஒவ்வொரு கோயிலுக்கும் இவ்வாறான கதைகள் உண்டு. இது உண்மையா இல்லையா என்பதை நாம் ஆராய இயலாது. இதை நாம் வரலாற்றோடு ஒப்பிடுகையில், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுணன் மாபெரும் சிவ பக்தன் என்பதை பட்டினத்தார் பாடல், மாணிக்க வாசகரின் திருக்கோவையார், தளவாய்புரம் செப்பேடுகளில் காண்கிறோம்.
வரலாற்றையும், மதத்தையும் பிரித்து பார்க்க இயலாது! அரசாங்கச் செயல்பாடுகளில் முக்கிய அங்கமாகவே கோயில்கள் திகழ்ந்தன. கோயில்கள் ஆத்திகர்களுக்கு மட்டும் இல்லை, கலை உணர்வு கொண்டவர்களுக்கும்,வரலாறு அறிய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கும் மிகப் பெரும் கருவூலம்!
கோயில்கள் ஆன்மீக சமந்தப்பட்ட விஷயமாக மட்டும் இல்லாமல், அந்த ஆட்சியின் ஒரு இயந்திரமாக இருந்திருக்கிறது!
காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோயில்கள் சில, காசிக்கு இணையானவை என்று கூறப்படுகிறது! அவற்றுல் ஒன்று, திருவிடைமருதூர் (திருஇடைமருதூர்) மகாலிங்கேஸ்வரர் கோவில்! இந்த கோவில் வரலாறு சற்று என்னை வியக்க வைத்தது! வரகுண பாண்டியன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்! ஒரு நாள் அவன் குதிரை ஒரு அந்தணனை மிதித்துக் கொன்றது.என்னதான் தன்னை அறியாமல் நடந்த நிகழ்ச்சி என்றாலும், ஒரு அந்தணனை கொன்றதால் அவனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது.அது மட்டும் அல்லாமல் அந்த பிராமணன் ஆவியும் அரசனை துன்புறுத்தத் துவங்கியது. இதையடுத்து, வரகுண பாண்டியன் கனவில் சிவ பெருமான், தன்னை திருவிடைமருதூரில் வந்து வழிபடுமாறு கூறினார். சோழ நாட்டில் உள்ள குடந்தைக்கு எப்படி செல்வது?! பின் தன் படையுடன் சோழ படையை வென்று, மகாலிங்கேஸ்வரரை வழிபட சென்றான். பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்ற போது, பிரம்மஹத்தி அரசருக்காக காத்திருந்தது. உள்ளே சிவன் ராஜாவிடம் மேற்கு வாசல் வழியாக வெளியேறினால் பிரம்மஹத்தி நீங்கும் என்று சொல்ல,அவரும் அம்மன் சன்னதி வழியாக வெளியேறினார். இதனால், இன்றளவும் கிழக்கு வாசலில் உள்ளே செல்பவர்கள், மேற்கு வாசல் வழியாக வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.அந்த பிரம்மஹத்தி இன்னும் அரசருக்காக காத்திருப்பதாக நம்பப்படுகிறது. சந்திரமுகி எப்பெக்டு வந்தாலும், இதுவே இத்தல வரலாறு!
ஒவ்வொரு கோயிலுக்கும் இவ்வாறான கதைகள் உண்டு. இது உண்மையா இல்லையா என்பதை நாம் ஆராய இயலாது. இதை நாம் வரலாற்றோடு ஒப்பிடுகையில், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுணன் மாபெரும் சிவ பக்தன் என்பதை பட்டினத்தார் பாடல், மாணிக்க வாசகரின் திருக்கோவையார், தளவாய்புரம் செப்பேடுகளில் காண்கிறோம்.
வரலாற்றையும், மதத்தையும் பிரித்து பார்க்க இயலாது! அரசாங்கச் செயல்பாடுகளில் முக்கிய அங்கமாகவே கோயில்கள் திகழ்ந்தன. கோயில்கள் ஆத்திகர்களுக்கு மட்டும் இல்லை, கலை உணர்வு கொண்டவர்களுக்கும்,வரலாறு அறிய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கும் மிகப் பெரும் கருவூலம்!
Comments
Post a Comment