இந்த காலத்து இளைஞர்களைப் பற்றி கொஞ்சம் செல்லுங்களேன்! இந்த கேள்வியை நமது பெற்றார் இடமோ,நமக்கு முந்தைய தலைமுறையினரிடமோ கேட்டு பாருங்கள். பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். Internet,social media என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள்; cellphone கையுமாக இருக்கிறவர்கள் ; junk food தலைமுறையினர், குடும்பத்தார் மீது உள்ள பாசத்தை அவர்களிடம் காட்டாமல் love u mom னு Facebook status போடும் தலைமுறை.
இவையெல்லாம் உண்மை என்ற போதிலும், பல தலைமுறைகளாக இல்லாத விஷயங்களும் எங்கள் தலைமுறையினரிடம் உண்டு. அதை கவனிக்கத்தான் யாரும் முயல்வதில்லை.
நம அப்பா,தாத்தா காலங்களில் ஒருவர் வாழ்க்கையில் பெரிய ஈடுபாடுடின்றி சுற்றித் திரிந்தால் "கால் கட்டு போட்டா செரியாப் போயிரும்" என்று சொல்லி கல்யாணம் செய்து வைப்பது வழக்கம்.
ஆனால் இந்த கால இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களது வழிகளில் செலுத்தி,தங்கள் லட்சியத்தை அடையாமல் கல்யாணம் குறித்து யோசிப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி அதீதமாக இருக்கும் நிலையில், போட்டி போட்டுக்கொண்டு ஒடும் தலைமுறையினர் நாங்கள். வாரம் ஐந்து நாட்கள் வேலை செய்வதை யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு நாட்கள் cinema, party, shopping னு எதாவது ஒரு வாரம் சென்றாலே "இது எல்லாம் எங்க உருப்படும் " னு திட்டு வாங்கும் தலைமுறையும் நாங்கள் தான். ஆண் - பெண் நட்பை தவறாக பார்க்காமல் இருக்க இந்த உலகத்திற்கு சொல்லிக் கொடுத்த தலைமுறையினர் நாங்கள்.
பெண்கள் சுதந்திரம் பல ஆண்டுகள் முன்பு வரை வெறும் மேடைப் பேச்சு. ஆனால் இன்றோ எங்கள் பெண்கள் காலடி பதிக்காத துறை தான் உண்டோ!
கல்யாண வாழ்க்கை சரிவரா விட்டால், 'பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும் ' என்ற தவறான கோட்ப்பாட்டில் கட்டுண்டு இல்லாது, தனக்காக சிந்தித்து, தன் இலக்கையும் கவனித்து, குடும்பத்தையும் கவனிக்கும் எங்கள் பெண்கள்.
நம் வயதில் நமது பெற்றவர்களுக்கு இருந்து அனுபவம், தெளிவை விட நமக்கு இன்று இருக்கும் அனுபவம் அதிகம். மிகத் தெளிவாக, தங்கள் வாழ்க்கைக்கு எது வேண்டும்/வேண்டாம் என்று முடிவெடுக்கக் கற்றுக் கொண்டவர்கள்.
பிறரை எடை போட்டு, புரளி பேசாமல், அவர்கள் நிலையில் அவர்களை புரிந்து கொள்பவர்கள்.
சமுதாயக் கோட்ப்பாட்டில் தான் என்ற அடையாளத்தை இழக்காத தலைமுறை.
யார் என்ன நினைத்தாலும், 'இது தான் நான் ' என்று சொல்லத் துணிந்தவர்களும் நாங்கள் தான்.
காலத்தின் திருவிளையாடலாய் எங்கள் வாழ்க்கை பயணம்...
இவையெல்லாம் உண்மை என்ற போதிலும், பல தலைமுறைகளாக இல்லாத விஷயங்களும் எங்கள் தலைமுறையினரிடம் உண்டு. அதை கவனிக்கத்தான் யாரும் முயல்வதில்லை.
நம அப்பா,தாத்தா காலங்களில் ஒருவர் வாழ்க்கையில் பெரிய ஈடுபாடுடின்றி சுற்றித் திரிந்தால் "கால் கட்டு போட்டா செரியாப் போயிரும்" என்று சொல்லி கல்யாணம் செய்து வைப்பது வழக்கம்.
ஆனால் இந்த கால இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களது வழிகளில் செலுத்தி,தங்கள் லட்சியத்தை அடையாமல் கல்யாணம் குறித்து யோசிப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி அதீதமாக இருக்கும் நிலையில், போட்டி போட்டுக்கொண்டு ஒடும் தலைமுறையினர் நாங்கள். வாரம் ஐந்து நாட்கள் வேலை செய்வதை யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு நாட்கள் cinema, party, shopping னு எதாவது ஒரு வாரம் சென்றாலே "இது எல்லாம் எங்க உருப்படும் " னு திட்டு வாங்கும் தலைமுறையும் நாங்கள் தான். ஆண் - பெண் நட்பை தவறாக பார்க்காமல் இருக்க இந்த உலகத்திற்கு சொல்லிக் கொடுத்த தலைமுறையினர் நாங்கள்.
பெண்கள் சுதந்திரம் பல ஆண்டுகள் முன்பு வரை வெறும் மேடைப் பேச்சு. ஆனால் இன்றோ எங்கள் பெண்கள் காலடி பதிக்காத துறை தான் உண்டோ!
கல்யாண வாழ்க்கை சரிவரா விட்டால், 'பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும் ' என்ற தவறான கோட்ப்பாட்டில் கட்டுண்டு இல்லாது, தனக்காக சிந்தித்து, தன் இலக்கையும் கவனித்து, குடும்பத்தையும் கவனிக்கும் எங்கள் பெண்கள்.
நம் வயதில் நமது பெற்றவர்களுக்கு இருந்து அனுபவம், தெளிவை விட நமக்கு இன்று இருக்கும் அனுபவம் அதிகம். மிகத் தெளிவாக, தங்கள் வாழ்க்கைக்கு எது வேண்டும்/வேண்டாம் என்று முடிவெடுக்கக் கற்றுக் கொண்டவர்கள்.
பிறரை எடை போட்டு, புரளி பேசாமல், அவர்கள் நிலையில் அவர்களை புரிந்து கொள்பவர்கள்.
சமுதாயக் கோட்ப்பாட்டில் தான் என்ற அடையாளத்தை இழக்காத தலைமுறை.
யார் என்ன நினைத்தாலும், 'இது தான் நான் ' என்று சொல்லத் துணிந்தவர்களும் நாங்கள் தான்.
காலத்தின் திருவிளையாடலாய் எங்கள் வாழ்க்கை பயணம்...
உண்மையான பதிவு.....
ReplyDelete