Skip to main content

(W)hatsapp (T)witter (F)acebook தலைமுறை

இந்த காலத்து இளைஞர்களைப் பற்றி கொஞ்சம் செல்லுங்களேன்! இந்த கேள்வியை நமது பெற்றார் இடமோ,நமக்கு முந்தைய தலைமுறையினரிடமோ கேட்டு பாருங்கள். பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். Internet,social media என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள்; cellphone கையுமாக இருக்கிறவர்கள் ; junk food தலைமுறையினர், குடும்பத்தார் மீது உள்ள பாசத்தை அவர்களிடம் காட்டாமல் love u mom னு Facebook status போடும் தலைமுறை.

இவையெல்லாம் உண்மை என்ற போதிலும், பல தலைமுறைகளாக இல்லாத விஷயங்களும் எங்கள் தலைமுறையினரிடம் உண்டு. அதை கவனிக்கத்தான் யாரும் முயல்வதில்லை.

நம அப்பா,தாத்தா காலங்களில் ஒருவர் வாழ்க்கையில் பெரிய ஈடுபாடுடின்றி சுற்றித் திரிந்தால் "கால் கட்டு போட்டா செரியாப் போயிரும்" என்று சொல்லி கல்யாணம் செய்து வைப்பது வழக்கம்.
ஆனால் இந்த கால இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களது வழிகளில் செலுத்தி,தங்கள் லட்சியத்தை அடையாமல் கல்யாணம் குறித்து யோசிப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி  அதீதமாக இருக்கும் நிலையில், போட்டி போட்டுக்கொண்டு ஒடும் தலைமுறையினர் நாங்கள். வாரம் ஐந்து நாட்கள் வேலை செய்வதை  யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு நாட்கள் cinema, party, shopping னு எதாவது ஒரு வாரம் சென்றாலே "இது எல்லாம் எங்க உருப்படும் " னு திட்டு வாங்கும் தலைமுறையும் நாங்கள் தான். ஆண் - பெண் நட்பை தவறாக பார்க்காமல் இருக்க இந்த உலகத்திற்கு சொல்லிக் கொடுத்த தலைமுறையினர் நாங்கள்.

பெண்கள் சுதந்திரம் பல ஆண்டுகள் முன்பு வரை வெறும் மேடைப் பேச்சு. ஆனால் இன்றோ எங்கள் பெண்கள் காலடி பதிக்காத துறை தான் உண்டோ!
கல்யாண வாழ்க்கை சரிவரா விட்டால், 'பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும் ' என்ற தவறான கோட்ப்பாட்டில் கட்டுண்டு இல்லாது, தனக்காக சிந்தித்து, தன் இலக்கையும் கவனித்து, குடும்பத்தையும் கவனிக்கும் எங்கள் பெண்கள்.

நம் வயதில் நமது பெற்றவர்களுக்கு இருந்து அனுபவம், தெளிவை விட நமக்கு இன்று இருக்கும் அனுபவம் அதிகம். மிகத் தெளிவாக, தங்கள் வாழ்க்கைக்கு எது வேண்டும்/வேண்டாம் என்று முடிவெடுக்கக் கற்றுக் கொண்டவர்கள்.
பிறரை எடை போட்டு, புரளி பேசாமல், அவர்கள் நிலையில் அவர்களை புரிந்து கொள்பவர்கள்.

 சமுதாயக் கோட்ப்பாட்டில் தான் என்ற அடையாளத்தை இழக்காத தலைமுறை.
யார் என்ன நினைத்தாலும், 'இது தான் நான் ' என்று சொல்லத் துணிந்தவர்களும் நாங்கள் தான்.

காலத்தின் திருவிளையாடலாய் எங்கள் வாழ்க்கை பயணம்...

Comments

Post a Comment

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...