ஹோய்ஸாளர்களின் சின்னம் |
தக்ஷிணபாதத்தின் பனாரஸ் என்று கூறப்படும் பேலூர்,கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரிலிருந்து 222 கி.மீ உம்,மாவட்ட தலைநகரான ஹாஸன் என்ற ஊரில் இருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது.
பன்னிரண்டாம் நூற்றாண்டு இறுதியில் சாளுக்கியர்கள் வீழத் துவங்கி இருந்தார்கள். அதன் பிறகு நான்கு முக்கிய சாம்ராஜ்யங்கள் தெற்கே இருந்தன. அவற்றில் ஒன்று ஹோய்ஸாளர்கள். 13ஆம் நூற்றாண்டில் கர்நாடகவிலுள்ள முக்கிய பகுதிகள், தமிழ் நாடு மற்றும் கேரளா வில் சில பகுதிகளும், ஆந்திரா மற்றும் டெக்கான் பகுதிகளும் ஹோய்ஸாளர்களின் கீழ் இருந்தது. அவர்களில் முக்கிய அரசர்கள்
விஷ்ணுவர்தனன், இரண்டாம் மற்றும் மூன்றாம் வீரபல்லாள ஆவர்.
விஷ்ணுவர்தன் காலத்தில் பேலூர் ஹோய்ஸாளர்களின் தலைநகராக இருந்தது. பேலூர் சென்னகேசவ ஆலயம் 1117ஆம் ஆண்டு விஷ்ணுவர்தனால் கட்டத் தொடங்கப்பட்டது. ஹோய்ஸாளர்களின் கலை நுட்பம் மிக நுண்ணிய வேலைப் பாடுகளைக் கொண்டது. பேலூர்க்குப் பிறகு ஹளேபீடுவை தலைநகராகக் கொண்டு இயங்கத் தொடங்கியது.
ஹோய்ஸாளர்களின் கோவில்கள் அலங்காரச் சிற்பகலையோடு கூடிய ஜன்னல்கள்,கருவறைக் கூடம்,தொடர் கூடம், நவரங்க மண்டபம், குளம் என்று அனைத்தும் உண்டு. சென்னகேசவ ஆலயத்தில் பெருமாள் மோகினி ரூபத்தில் காட்சி தருகிறார்.
இந்த கோவில்களில் உள்ள சிற்பங்கள் இன்று நாம் மலையென நம்பி இருக்கும் Technology ஐயே சந்தேகிக்க வைக்கிறது. நளினம் சற்றும் குறையாத சிற்பங்கள்,ராமாயண,மகாபாரதக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள், எந்தப் படையெடுப்புகளிலும் சிக்கிக் கொள்ளாத கோபுரங்கள், எத்தனை தலைமுறைகள் தாண்டினாலும் எங்கள் சாம்ராஜ்யத்தின் புகழ் நிலைத்து நிற்க வேண்டும் என்று உழைத்த சிற்பிகள்..இவை மட்டும் இன்றி கடவுள் அருளும் இருந்தமையால் மட்டுமே கல்லிலே கலைவண்ணம் உருவாக்க முடிந்தது.
நமது தமிழ்க் கோவில்கள் பிரம்மாண்டம்..
இவை நுணுக்கம்.
ஹளேபீடு |
பேலூர் |
![]() |
விஷ்ணுவர்தனின் பட்டத்து ராணி சாந்தலா தேவி கட்டியது _கப்பே சென்னிகராயா கோவில்,பேலூர் |
![]() |
சென்னகேசவ ஆலயம், பேலூர் |
சிற்ப வேலைப் பாடுகளைக் கொண்ட பேலூர் |
மகாபாரதக் காட்சி - அபிமன்யூ பத்மவ்யூகத்தில் மாட்டிக் கொண்ட காட்சி (circle to the right) |
ராமாயண காட்சி _வாணரங்கள் சூழ ராமன் அம்பு எய்தும் காட்சி -பல மரங்களை துழைத்து செல்லும் அம்பு |
![]() |
ஹளேபீடு, சுற்றுச்சுவர் |
Comments
Post a Comment