Skip to main content
இந்து மதத்தில் உள்ள நடைமுறைகளை மூட நம்பிக்கையாக பார்க்கும் இந்துக்களுக்கு  மட்டுமே இப்பதிவு.ஒரு இந்து என்ற முறையில் நான் இந்தப் பதிவை மேற்கொள்ள நேர்கிறேன். 
வலைதளங்களில் இந்துக்களின் பல பழக்கவழக்கங்களை கேலி செய்யும்  பதிவுகளை  இந்துக்களே வெளியுடும்போது உள்ளெழுந்த சினத்தின் வெளிப்பாடு இப்பதிவு. எந்த ஒரு மதத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு என்று சில வழிபாடு முறைகள் உண்டு. அதற்கு காரண காரியங்களும் உண்டு. நம் மதத்திலும் அதே போலத்தான். ஒரு முஸ்லிமோ அல்லது கிறிஸ்துவோ தனது மதத்து அவதூர் செய்யும் எந்த படைப்புகளையும் ஏற்பதில்லை . ஆனால் நாம்?இந்த தலைமுறையினர் குறிப்பாக  எதையும் புரிந்து கொள்ள முன்வருவதும் இல்லை. உங்கள் மதம் ஏதற்காக இதை  சொல்கிறது என்று நீங்களும் கேட்பதில்லை ; பெற்றோர்களும் சொல்வதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் தெரிவதில்லை. மூட நம்பிக்கைகலாக்கப்பட்ட இந்து கலாச்சாரங்கள் பல. நம் பண்டிகைகளுக்குக் கூட விடுப்பெடுக்க வழி இல்லாமல் கோர்போர்டே அடிமைகளாய் இன்னும் எவ்வளவு காலம்? தனியார் மட்டும் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்களில் எத்தனை பேர் கடைசியாக வீட்டில் உள்ளோருடன் இணைந்து புதுத் துணி உடுத்தி தீபாவளி கொண்டாடியது? பொங்கலா? அமெரிக்க கம்பனிகளுக்கு ஏது பொங்கல் ? கார்த்திகை நோன்பு,திருவாதிரை, கோகுலாஷ்டமி, ராம நவமி, அனுமன் ஜெயந்தியை  விடுப்பு நாட்களாக மட்டும் பார்க்கும் நாம் அது என்ன எதற்கு என்று கூட ஆராயும் நிலையில் இல்லை. நம் மகாபாரதத்தை கூட விஜய் டிவி சீரியல் ஆக்கும் வரை பொருத்து இருந்துதான் அறிந்து கொள்வோம். நம் பாரம்பரியங்களுக்கும் முற்றுபுள்ளி இந்த ஜல்லிக்கட்டோடு. இப்படியே போனால் நாலு தலைமுறை தாண்டும்போது இந்து மதம் பண்டிகைகள் ஏதும் மிஞ்சாது. ஹாலோவீனும் தேங்க்ஸ் கிவிங்கும் மட்டும்தான். மகாபாரதம் நடந்ததர்க்கு அத்தாட்சியான் ஆய்வுகள் பல மேற்கொள்ளப் படமாலே உள்ளன. dwaraka வில் கிருஷ்ணாவின் சாம்ராஜ்யம் கடலுக்கு அடியில் படுத்து கிடக்கிறது. அதை பற்றி நமக்கு என்ன? இதே முஸ்லிம் கடவுளான ப்ரோபட் பற்றி ஆய்வு துவங்காமல் இருக்கட்டும்? அங்கு நடப்பதே வேறு. நாம் தான் எதையும் சகித்துக் கொள்பவர்கலாயிற்றே.
இந்த தலைமுறையினர் ஆயினும் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை நமக்கு ஏன் இல்லை? ஆயிரம் தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் , விஞ்ஞானம் பதில் சொல்ல இயலா கேள்விகளுக்கு இந்து மதத்தில் விடை உண்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் இல்லாத விஞ்ஞானம்  இல்லை. குழந்தை கருவில் எப்படி இருக்கிறது என்று மட்டும் தான் விஞ்ஞானம் சொல்லும். அது என்ன நினைக்கிறது என்று கூட பாகவதம் சொல்லும்.உங்கள் சயின்ஸ் மூளைக்கே எட்டா தொலைவு அது. வாழ்கையில் நம்மையும் மீறி  நடக்கும் எந்த விஷயத்திற்கும் சயின்ஸ் விடை அளிக்காது. ஆனால் நமது கீதை அளிக்கும். வாழ்கையில் அடிபட்டு தெரபிஸ்ட் இடம் செய்யும் செலவை கீதையில் செய்யுங்கள். மதத்தை தாண்டிய புத்தகம் அது. ஸ்ட்ரெஸ் மட்டுமே வாழ்க்கயாய் விட்ட இந்த காலத்தில் வாழ்கையை மேம்படுத்த மதம் கண்டிப்பாகக் கை கொடுக்கும்.
இந்து வெறியர்கள் என்று ஒரு கூட்டம். அதில் ஒருவர் கூட கீதையை கண்ணில் கூட பார்த்திர வாய்ப்பில்லை. தங்கள் மதத்தை புரிந்து கொண்ட எவரும் மதக் கலவரங்களில் ஈடுபடமாட்டார்கள். போலிச் சாமியார்கள் ஒரு கூட்டம் வேறு போதாகுறைக்கு. முஸ்லிம்  படையெடுப்புகள் ,மிஸ்ஸனரி மாற்றங்களை தாண்டிய மதம். நம் கவனக் குறைவால் கண் முன் கீழே போய்க் கொண்டிருக்கிறது. 
ஒரு கருத்தை விமர்சிக்கும் முன் அதை பற்றி அறியாமல் விமர்சிக்கும் பழக்கத்தை விடுப்போம். தொன்மையான வேர்களை இணையத்தினால் நாலே தலைமுறைகளில் வெட்டி வீழ்த்தாமல் இருக்க நம்மால் இயன்றதைச் செய்வோம். ஆன்மீகத்தை வழுவுவதால் உங்கள் நவ நாகரீகம் எதுவும் மலை ஏரிவிடாது.


Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...