இடம்: திருவிசலூர்
திருவியலூர், திருவிசநல்லூர்
என்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் வேப்பத்தூர்
வழியில் அமைந்துள்ளது. வியலூர் என்ற பெயரில் தஞ்சையில் மேலும் இரண்டு ஊர்கள்
உள்ளன. இங்கு உள்ள கோவிலில் சுவாமியின் பெயர் யோகனந்தீஸ்வரர்,அம்மை சாந்த நாயகி.
வில்வாராண்யேஸ்வரர் ,புராதனேஸ்வரர் என்றும் அழைக்கப் பெறுவார். இராமாயணத்தில் வரும்
ஜடாயு வழிபட்டுப் பேரின்பம் எய்திய ஊர். ரிஷப ராசிக்குரிய தோஷ நிவர்த்தித் தலமாக
இது பார்க்கப்படுகிறது.
இக்கோவிலின்
கல்வெட்டுகள் படி இக்கோவில் 985-1013ல் அரசாண்ட சோழ தேசத்து மாபெரும் சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழன் காலத்து
அவனிநாராயண சதுர்வேதிமங்கலத்தைச் சார்ந்தது.பின் 1011-1043 வரை ஆட்சி செய்த தட்சினபாத வேங்கை
ராஜேந்திர சோழன் காலத்தில் வடகரை ராஜேந்திர சிம்மவளநாட்டு மண்ணி நாட்டு
பிரம்மதேயமான் வேப்பத்தூர் சோழ
மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தது தெரிகிறது.
சோழ நாட்டை வளநாடாக
பிரித்து இருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் நிலவிய சபயைபோல் ஒவ்வொரு
வள நாட்டிற்கும் ஒவ்வொரு தனிச்சபை. அந்நாட்டின் பொது காரியங்களை நிறைவேற்றும்
பொருட்டு அமைக்கப்பட்டது.
ஊர்,கிராமம்,நகரம்,நாடு,மண்டலம்
என்ற வரிசயில் சோழ தேசம் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. பிரம்மதேயம் என்பது
பிராமனர்களுக்கு அழிக்கப்பட்ட ஊர்.
இத்தல கல்வெட்டுகளில்
குறிப்பிடப்படும்
சோழ மன்னர்கள் –
பன்னிருவர்
பாண்டியர் - வரகுணபாண்டியன்
விஜயநகர் பேரரசர் –
கிருஷ்னதேவராயர்
முதல் மற்றும் இரண்டாம்
பராந்தகன் காலத்தில் விளக்குக்காகப் பொன்னும் ஆடுகளும் , அபிஷேகப் பொருட்களுக்காக
நிலமும் வழங்கப்பட்டுளது. பராந்தக பல்லவராயன் காலத்திலும் இவை செய்யப்பட்டுள்ளன.
அரசர் ராஜ ராஜ சோழன் இக்கொவிளுக்குத் துலாபாரம் புக்குதானம் செய்ததாகவும்
கல்வெட்டு கூறுகிறது. இவருடைய தமக்கையும் வல்லவரயார் வந்தியத்தேவரின் மனைவியும்
ஆனா குந்தவை நாச்சியார் பழையாறையில் இருக்கும்பொழுது நிலம் அளித்தார் என்ற
கல்வெட்டும், ராஜேந்திர சோழனும் அவன் மனைவியரும் இக்கோவிலுக்கு அளித்த நன்கொடைகள்
பற்றிய விவரங்களும் உண்டு. தென்புற பிரகாரத்தில் இக்கோவிலை கட்டியவநான ஆனந்த சிவன்
என்பவனுடைய உருவம் இருக்கிறது. அதில் ஒரு பகுதி சுவர் மறைந்து விட்டது.
அந்தக் காலத்தில்
கல்வெட்டுகள் என்பது அரசாங்க இயந்திரத்தின் ஆவணங்களாக இருந்துள்ளன. நம்
முன்னோர்களின் வாழ்வியல் குறிப்புக்கள் அவை. கோவில் புதுப்பிக்கும் பணி என்ற
பேரிலும், கோவிலை பராமரிப்பே இல்லாமல் விட்டுவிடுவதும் என்று நமது அலட்சியங்களால்
அழியும் கல்வெட்டுக்கள் ஏராளம்.
Comments
Post a Comment