Skip to main content

அத்தியாயம் 1


கி.பி.2050; இந்தியா

“காலம் பொன் போன்றது “,“காலத்தை இழந்தால் திரும்பிப் பெற இயலாது”, “கடந்த காலத்தை எண்ணி எந்தப் பயனும்  இல்லை,எதையும் மாற்ற இயலாது” இதெல்லாம் நாம் வளரும் போது நமக்குச் சொல்லப்பட்டவை. எட்டா தொலைவில் உள்ள கிரகங்களுக்குச் சுற்றுலா செல்ல வழி வகுத்து விட்ட விஞ்ஞானம் இந்த பழ மொழிகளையா மாற்றாது?

ஆம். காலப் பெருவெளியில் பயணிக்கும் எந்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் வடிவைமைத்து உள்ளார்கள். இது மிகவும் ரகசியமான பணி. 5 விஞ்ஞானிகள் மற்றும் என்னைப் போல 2  ஐ.ஏ.ஸ் அதிகாரிகளும் இக்குழுவில் உள்ளோம். இது சாமநியார்களின் பயன்பாட்டுக்கு வந்தால் நிகழக் கூடிய விபரிதங்கள் ஏராளம். அரசாங்கத்துக்கே தெரியாமல் நடக்கும் பணி ஆதலால், மிகவும் நம்பிக்கைக் குறியவர்களை மட்டும் உள்ளடக்கியுள்ளோம் .  இக்கருவியின் மூலம் கடந்த காலத்துக்கோ,எதிர் காலத்துக்கோ செல்லலாம். ஆனால் எந்த ஒரு நிகழ்வையும் மாற்ற இயலாது. அதாவது,எதிர் காலத்தில் சென்று என்ன நடக்கும் என்று காணலாம். ஆனால் நமக்கு சாதகமாக நிகழ்வுகளை மாற்ற இயலாது. அதையும் மாற்றவே எங்கள் உழைப்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இது மிகவும் ரகசியமான தொழில்நுட்பம் ஆதலால், எங்களில் யாரோ ஒருவர் தான் இதை பரிட்சயித்து பார்க்க இயலும். நானாக முன்வந்து பயணிக்க  ஒப்புக்கொண்டேன்.அங்கு போய் செய்ய கூடிய/கூடாதவை பற்றி விஞ்ஞானிகள் எனக்குப் பயிற்சி அளித்தனர். திரும்பி வர தேவையான அத்தனை பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அவசர தேவைக்கு பயன் படுத்த ஒரு கைத் துப்பாக்கி மட்டும் எடுத்துக் கொண்டேன். ஏக்கம் நிறைந்த ஏழு பார்வைகள் வழியனுப்ப என் பயணத்தைத்  தொடங்கினேன். விண்கலம் போன்ற அமைப்பு பெற்ற அக்கருவியில் காலம் மற்றும் இடம் குறிப்பிட வேண்டும். அதில் கி.பி. 1010,  தஞ்சை என்று குறிப்பிட்டு என்ட்டர் பட்டனை தட்டினேன். எண்ண ஓட்டத்தின் வேகத்தில் கலம் சுழன்று நின்றது.





Comments

Post a Comment

Popular posts from this blog

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாமல் போய் இருந்தால் மகாபாரதம் வேறு மாதிரி போயிருக்கலாம்.அவள்  அ

எழுத்துக்களும் சித்திரங்களே 18

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ