கி.பி.2050; இந்தியா
“காலம் பொன் போன்றது “,“காலத்தை இழந்தால் திரும்பிப் பெற இயலாது”, “கடந்த காலத்தை எண்ணி எந்தப் பயனும் இல்லை,எதையும் மாற்ற இயலாது” இதெல்லாம் நாம் வளரும் போது நமக்குச் சொல்லப்பட்டவை. எட்டா தொலைவில் உள்ள கிரகங்களுக்குச் சுற்றுலா செல்ல வழி வகுத்து விட்ட விஞ்ஞானம் இந்த பழ மொழிகளையா மாற்றாது?
ஆம். காலப் பெருவெளியில் பயணிக்கும் எந்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் வடிவைமைத்து உள்ளார்கள். இது மிகவும் ரகசியமான பணி. 5 விஞ்ஞானிகள் மற்றும் என்னைப் போல 2 ஐ.ஏ.ஸ் அதிகாரிகளும் இக்குழுவில் உள்ளோம். இது சாமநியார்களின் பயன்பாட்டுக்கு வந்தால் நிகழக் கூடிய விபரிதங்கள் ஏராளம். அரசாங்கத்துக்கே தெரியாமல் நடக்கும் பணி ஆதலால், மிகவும் நம்பிக்கைக் குறியவர்களை மட்டும் உள்ளடக்கியுள்ளோம் . இக்கருவியின் மூலம் கடந்த காலத்துக்கோ,எதிர் காலத்துக்கோ செல்லலாம். ஆனால் எந்த ஒரு நிகழ்வையும் மாற்ற இயலாது. அதாவது,எதிர் காலத்தில் சென்று என்ன நடக்கும் என்று காணலாம். ஆனால் நமக்கு சாதகமாக நிகழ்வுகளை மாற்ற இயலாது. அதையும் மாற்றவே எங்கள் உழைப்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இது மிகவும் ரகசியமான தொழில்நுட்பம் ஆதலால், எங்களில் யாரோ ஒருவர் தான் இதை பரிட்சயித்து பார்க்க இயலும். நானாக முன்வந்து பயணிக்க ஒப்புக்கொண்டேன்.அங்கு போய் செய்ய கூடிய/கூடாதவை பற்றி விஞ்ஞானிகள் எனக்குப் பயிற்சி அளித்தனர். திரும்பி வர தேவையான அத்தனை பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அவசர தேவைக்கு பயன் படுத்த ஒரு கைத் துப்பாக்கி மட்டும் எடுத்துக் கொண்டேன். ஏக்கம் நிறைந்த ஏழு பார்வைகள் வழியனுப்ப என் பயணத்தைத் தொடங்கினேன். விண்கலம் போன்ற அமைப்பு பெற்ற அக்கருவியில் காலம் மற்றும் இடம் குறிப்பிட வேண்டும். அதில் கி.பி. 1010, தஞ்சை என்று குறிப்பிட்டு என்ட்டர் பட்டனை தட்டினேன். எண்ண ஓட்டத்தின் வேகத்தில் கலம் சுழன்று நின்றது.
Nice start Swathi! Waiting for the next episode!
ReplyDelete