Skip to main content

அத்தியாயம் 2


கலத்தில் இருந்து இறங்கியவுடன் லேசாக தலை சுற்றுவது போல இருந்தது. அதை சரி செய்து கொள்ளப் பயிற்சி இருந்தபடியால் சில விநாடிகளில் என்னை சரி செய்து கொண்டேன். கலத்தை மறைவில் விட்டுவிட்டு நடக்கத் துவங்கினேன். சற்று தூரம் நடந்ததும் ஒரு பெரிய மைதானம் போல் இருந்த இடத்திற்கு வந்தடைந்தேன். மைதானத்தைச் சுற்றி அங்காங்கே தென்னை ஓலைகள் கொண்டு நிழல் குடைகள் வடிவமைக்கப் பட்டு இருந்தன. அதன் அடியில் சிலர் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். நானும் அங்கு சென்று நடப்பது என்ன என்று பார்க்கத் தொடங்கினேன். போர் கவசம் முற்றிலும் தரித்த ஒரு உருவம் தன் வாளைக் கச்சையில் இருந்து உருவி நின்றது. முகத்தை மூடிய படியால் அதன் முகத்தை சரியாகப் பார்க்க இயலவில்லையாயினும் ,அந்த உருவத்தைச் சுற்றி பலர் காயமுற்று வலியால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது அவ்வுருவம் சாமானியன் அல்லன் என்றும், மாவீரன் என்றும் உறுதியாகச் சொல்ல இயலும். வேறொரு வீரன் அந்த உருவத்தை நோக்கி உயர்த்திய வாளோடு நகரத் தொடங்கியவுடன் அவ்வுருவம் அவன் அசைவைத் துல்லியமாக கணக்கிட்டு அவன் வாளைத் தடுத்தது. அதன் பின் நடந்த வாட் போரில் அவ் வீரனால் அந்த உருவத்தின் வாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மண்டியிட்டான். அதன் பின் தன் முகத்தை மறைத்திருந்த முகமூடியை அவ்வுருவம் அவிழ்த்தது. 
கயல் விழிகள் இரண்டிலும் வீரமும் கர்வமும் மிளிர்ந்த பெண் ஒருத்தி அம்முகமூடிக்குள் இருந்து வெளி வந்தாள். ராஜ களைஅவள் முகத்தில் சுடர்விட்டு எரிய, கையில் மரகதமும் கழுத்தில் பாண்டிநாட்டு முத்தும் செவிகளில் வைரமும் ஜொலித்தது. இத்தனை பேரை வீழ்த்தியது ஒரு பெண்ணா? என்ற மலைப்பில் அவளை நோக்கிக் கொண்டிருந்தேன். அவள் எழில் தோற்றம் கண்டு சில நொடிகள் பிரமிக்கவே செய்தாலும் அதில் இருந்து விடுபட்டு,அவளிடம் பேச முனைந்தேன். அப்பொழுது ஐந்து வீரர்கள் வந்து என்னைச் சுற்றி வளைத்தனர். பின் அவள் விரலால் அவர்களுக்கு ஏதோ சமிக்ஞை செய்ய அவர்கள் அனைவரும் பின் வாங்கினர்.

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...